ஆவடி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராஜசிம்மா மகேந்திரா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராஜசிம்மா மகேந்திரா, திருமுல்லைவாயிலில் உள்ள பச்சையம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி பின் பரப்புரையை தொடங்கினார்.
திறந்த வாகனத்தில் பரப்புரை மேற்கொண்ட அவர், மத்திய அரசின் சாதனைகளை விளக்கிக் கூறியும், திமுக அரசு செய்த ஊழல்களை பட்டியலிட்டும் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
















