மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அக்கட்சி வேட்பாளர் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பா போட்டியிடும் நிலையில், பாரப்பத்தி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கான முதல் கையெழுத்தை எடப்பாடி பழனிசாமி போடுவார் என தெரிவித்தார்.
இலவச பிரிட்ஜ் திட்டம், வெறும் கூப்பனாக இல்லாமல் நேரடியாக மக்களுக்குச் சென்றடையும் என உறுதியளித்தார்.
மேலும், அதிமுக கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட்டு பேசிய அவர், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
















