என்டிஏ கூட்டணி ஆட்சி அமைந்த உடனயே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கப்படும் என ராமநாதபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் நாகேந்திரன் உறுதி அளித்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உத்தரகோசமங்கை கோயிலில் பாஜக வேட்பாளர் ஜிபிஎஸ் நாகேந்திரன் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் உத்தரகோசமங்கை, நல்லிருக்கை, கோனேரி உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார்.
அப்போது விவசாயிகள் சிலர், தங்களுக்கு வெள்ள நிவாரண தொகை வழங்கப்படவில்லை என வேதனை தெரிவித்தனர்.
இதனை கேட்ட பாஜக வேட்பாளர், என்டிஏ கூட்டணி ஆட்சி அமைந்த உடனயே நிவாரண தொகை வழங்கப்படும் என உறுதி அளித்தார்.
















