திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், காயல்பட்டிணம் புறநகர் பகுதியில் திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய பெண்கள் தங்கள் பகுதிக்கு எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை எனக்கூறி அமைச்சரின் வாகனத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து, அமைச்சரின் ஆதரவாளர்கள் பெண்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
















