ஆத்தூரில் 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் வீடு வீடாக சென்று சீலிடப்பட்ட பெட்டிகளில் தபால் வாக்குகளை தேர்தல் பணியாளர்கள் பெற்று வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என ஆயிரத்து 12 பேர் வாக்களிக்க உள்ள நிலையில், அவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு சென்று வாக்கு சீட்டுகள் மூலம் சீலிடப்பட்ட பெட்டியில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் 649 வயதானவர்கள், 663 மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்க உள்ள நிலையில், ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து 19 குழுக்களாக பிரிந்து வாக்குகளை பெற அதிகாரிகள் சென்றனர். ஆத்தூர் நகர பகுதியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களிடம் அவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு சென்று சீலிடப்பட்ட பெட்டியில் தபால் வாக்குகளை பெற்று வருகின்றனர்.
















