நெல் சாகுபடி ஊக்கத்தொகை விவகாரம் - தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!
Apr 13, 2026, 04:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல் சாகுபடி ஊக்கத்தொகை விவகாரம் – தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 13, 2026, 03:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு தமிழகத்திற்கு உத்தரவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மத்திய அரசுக்கு தமிழக அரசு எழுதிய கடிதத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வேளாண் சார்ந்த அனைத்துத் தரப்பினரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையில் ஈடுபடுவது அவசியமானது என தெரிவித்துள்ளார்.

ஆனால், முதலமைச்சர் ஸ்டாலினும் அவரது கட்சியும் எதில் கைதேர்ந்தவர்களோ அதையே இப்போதும் தொடர்கிறார்கள் என்றும், மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே விரிசலை உண்டாக்குவது, பொய் பிம்பங்களைக் கட்டமைப்பதை தொடர்ந்து செய்து வருகிறார்கள் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

விவசாயிகளின் காவலர்களாகவும் தமிழ் மக்களின் பாதுகாவலர்களாகவும் காட்டிக்கொள்வதை முதலமைச்சர் தொடர்ந்து செய்து வருவதாகவும் விமர்சித்துள்ளார்.
பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களின் உள்நாட்டு உற்பத்தியை விரிவுபடுத்துவது என்பது தேவை மட்டுமல்ல, உத்திசார்ந்தது எனக் குறிப்பிட்டுள்ள அவர்,எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி குறைவாக இருப்பதால்தான் நாம் அதிகளவில் பாமாயிலை இறக்குமதி செய்கிறோம் என்பது முதலமைச்சருக்கு தெரியாதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

விவசாயிகளின் நலனில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அக்கறையில்லை என விமர்சித்துள்ள நிர்மலா சீதாராமன், சமையல் எண்ணெய் இறக்குமதிச் செலவைக் குறைப்பதன் மூலம் பொருளாதார நிலைத்தன்மையை அடைய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறியுள்ளார்.

மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட தகவல், தேசிய உணவுப் பாதுகாப்பிற்கான பொறுப்பைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு அழைப்பு என தெரிவித்துள்ள அவர், முதலமைச்சர் ஸ்டாலின் மட்டுமே இதனை ஒரு சர்ச்சையாக்கி ஆதாயம் தேடப் பார்க்கிறார் என குற்றம்சாட்டியுள்ளார்.

அத்தியாவசியப் பயிர்களை உற்பத்தி செய்வதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படும்போது தான் உண்மையான உணவு இறையாண்மை ஏற்படும் எனக்கூறியுள்ள நிர்மலா சீதாராமன், மத்திய அரசுக்கு எதிரான வெற்றுப் பேச்சுக்களில் நேரத்தை வீணடிப்பதற்குப் பதிலாக, வெளிநாட்டு நலன்களுக்கு ஏன் வாய்ப்புகளை வழங்குகிறார் என்பதைப் தமிழக மக்களுக்கு விளக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

அனைத்து மாநிலங்களுக்கும் செலவினத் துறைச் செயலாளர் எழுதிய கடிதத்தை வெளியிடுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் சவால் விடுப்பது ஆச்சரியமளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ள அவர், இத்தகைய சவால்களை விடுப்பதன் மூலம் முதலமைச்சர் வெற்று வீரத்தையே வெளிப்படுத்துகிறார் என விமர்சித்துள்ளார்.

தேச நலனில் துளியும் அக்கறை கொண்ட எந்தவொரு முதலமைச்சரும், மத்திய அரசின் ஆக்கப்பூர்வமான ஆலோசனையை வரவேற்றிருப்பார்கள் எனக்கூறியுள்ள நிர்மலா சீதாராமன், ஆனால், ஸ்டாலின் ஒரு பயனுள்ள ஆலோசனையைத் திட்டமிட்டு ஒரு குறையாகச் சித்தரிக்கிறார் என தெரிவித்துள்ளார்.

மேலும், திமுகவைப் பொறுத்தவரை இந்தியாவின் உத்திசார்ந்த தேவைகளை ஒரு பொருட்டாக எடுத்து கொள்வதில்லை என்றும், அரசியல் ஆதாயம் தேடுவது மட்டுமே திமுகவின் நோக்கம் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Tags: Chief Minister Stalinpaddy cultivationnirmala seetharamain release lettercentral governmentDMKstalinFinance Minister Nirmala Sitharaman
ShareTweetSendShare
Previous Post

தொகுதி பங்கீடு தொடர்பான அதிருப்தி – தமிழக தேர்தல் பிரச்சாரத்தை புறக்கணிக்க ராகுல்காந்தி முடிவு?

Next Post

திமுகவினர் 8,000 கூப்பன் வழங்குவது மக்களை ஏமாற்றும் முயற்சி – தமிழிசை சௌந்தரராஜன்

Related News

விரைவில் தேர்தல் களத்தில் சந்திப்போம் – வானதி சீனிவாசன்

திமுகவினர் 8,000 கூப்பன் வழங்குவது மக்களை ஏமாற்றும் முயற்சி – தமிழிசை சௌந்தரராஜன்

தொகுதி பங்கீடு தொடர்பான அதிருப்தி – தமிழக தேர்தல் பிரச்சாரத்தை புறக்கணிக்க ராகுல்காந்தி முடிவு?

இரு நாள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி – நாகர்கோவில், கோவையில் பரப்புரை செய்கிறார்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து – காயம் அடைந்தவர்களை சந்தித்து நயினார் நாகேந்திரன் நேரில் ஆறுதல்!

என்டிஏ கூட்டணிக்கு இந்து நாடார் சங்க கூட்டமைப்பு ஆதரவு!

Load More

அண்மைச் செய்திகள்

நெல் சாகுபடி ஊக்கத்தொகை விவகாரம் – தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!

உளவுத்துறை ஐஜி செந்தில்வேலனை மாற்ற வேண்டும் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் பாஜக சார்பில் புகார்!

திமுக  ஆட்சியை வேரோடு அகற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

ஏற்காடு தொகுதியில் கூப்பன் வழங்கும் திமுகவினர் – என்ன செய்கிறது தேர்தல் ஆணையம்!

கோவையில் வாக்காளர்களுக்கு திமுகவினர் டோக்கன் விநியோகம் செய்வதாக எழுந்த புகார் – தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை!

விண்ணில் 23 லட்சம் KM சென்று திரும்பும் ஆர்டெமிஸ் 2, மரண வாசலைத் தாண்டுமா ? – உன்னிப்பாக கவனிக்கும் உலகம்

மேற்குவங்கத்தை புரட்டிப்போட்ட பாஜகவின் தேர்தல் அறிக்கை!

உலகமே பொறாமைப்படும் இந்தியாவின் அணுசக்தி சாதனை!

ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடுகிறது – கருப்பு முருகானந்தம்

சாத்தூரில் நிதின் நபின் ரோடு ஷோ – நயினாருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies