நெல்லை மாவட்டத்தில் மட்டும 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், வெறும் ஒரு மாவட்டத்தில் 18 நாட்களில் இத்தனை குற்றங்கள் என்றால், தவெக அரசு பொறுப்பேற்ற இந்த ஒரு மாத காலத்தில் தமிழகம் முழுவதும் எத்தனை குற்றங்கள் நடந்திருக்கும்? எத்தனை குற்றங்கள் பதிவு செய்யப்படாமலே மறைக்கப்பட்டிருக்கும்? எத்தனை குழந்தைகளின் நல்வாழ்வு சீரழிக்கப்பட்டிருக்கும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேடைதோறும் சகோதரனாகவும் ‘அம்மா-மாமா’வாகவும் பேசிவிட்டு, அதிகார இருக்கையில் அமர்ந்ததும் தமிழகக் குழந்தைகளின் பாதுகாப்பைக் குப்பையில் வீசுவதுதானா விஜய் குறிப்பிட்ட அந்த ‘மாற்றம்’? என்றும் வினவியுள்ளார்..
POCSO குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், வெறும் வெற்றுப் பேச்சுக்களையும் மக்களைத் திருப்திப்படுத்தும் வசனங்களையும் பேசுவதை விடுத்து, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தவெக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நயினார் வலியுறுத்தியுள்ளார்.
















