திருப்பூரில் பெயரளவில் திடக்கழிவு மேலாண்மை : குப்பை மேடானது நொய்யல் ஆறு தீர்வு என்ன?
Jul 29, 2026, 04:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பூரில் பெயரளவில் திடக்கழிவு மேலாண்மை : குப்பை மேடானது நொய்யல் ஆறு தீர்வு என்ன?

Murugesan M by Murugesan M
Dec 6, 2025, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பின்னலாடைக்கு பெயர் போன திருப்பூர் குப்பை நகரமாக மாறிவிடுமோ என்று அச்சத்தில் உள்ளனர் அப்பகுதி மக்கள்…. திடக்கழிவு மேலாண்மை திட்டம் பெயரளவில் உள்ளதாலும், குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்படுவதாலும் திருப்பூரில் சுகாதார சீர்கேடு தலைவிரித்தாடுகிறது… இது குறித்த செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

பின்னலாடை மூலம் அந்நிய செலாவணியை அள்ளிக் கொடுக்கும் திருப்பூரில் இந்த நிலைமை. சாலையோரங்களில் எங்குப் பார்த்தாலும் மலை போல் டன் கணக்கில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள், திருப்பூர் மாநகராட்சியின் அவலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

இந்தியாவின் டாலர் சிட்டி என வர்ணிக்கப்பட்ட திருப்பூர், திமுக மேயர் தினேஷ்குமாரின் அலட்சியத்தாலும், செயல்படாத மாநாகராட்சி நிர்வாகத்தாலும், குப்பை நகரமாக மாறி வருகிறது.. மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகள், முதலில் காளம்பாளையத்தில் பயன்படாத பாறை பள்ளத்தில் கொட்டப்பட்டு வந்த நிலையில், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அங்கு குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்.

மக்களின் போராட்டம் காரணமாக வேலம் பாளையம், பின்னர் முதலிபாளையம், பின்னர் இச்சிப்பட்டி இறுதியாகச் சின்னக்காரி பாளையம் எனக் குப்பை கொட்டும் இடம் மாறியதே தவிர, உருப்படியான திட்டங்களை மாநகராட்சி செயல்படுத்தவில்லை என்கிறார்கள் பாதிக்கப்பட்டடவர்கள்.

இதுபோதாது என்று நொய்யல் ஆற்றின் கரையோரங்களிலும் மாநகராட்சி, குப்பைகளை கொட்டி வருவதால், சுற்றுச்சூழல் சீர்கெட்டுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர் திருப்பூர் மாநகராட்சியில் நாள்தோறும் 700 டன் குப்பைகள் சேகரிக்கப்படும் நிலையில், அதிமுக ஆட்சிக்காலத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் திறம்பட செயல்படுத்தப்பட்ட காரணத்தால், பொதுமக்கள் இடையூறுகளைச் சந்திக்கவில்லை.

ஆனால் கடந்த நான்கு ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் என்றால் என்ன என்று கேட்கும் அளவுக்குத் திருப்பூர் குப்பைகளால் நிரம்பியுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். திருப்பூரை குப்பை நகரமாக மாற்றியுள்ள மாநகராட்சி நிர்வாகம், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தைச் செயல்படுத்தி குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்பதே திருப்பூர் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags: குப்பைநொய்யல் ஆறுnewsSolid waste management in Tiruppur is nominal: What is the solution to the Noyyal Rivera garbage dump?திருப்பூரில் பெயரளவில் திடக்கழிவு மேலாண்மை
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் சுமார் ₹5,000 கோடி ஏப்பம் விட்டு ருசி கண்ட திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

அமைச்சரவை செயலாளர் பிரதமர் மோடியின் வலதுகரம்!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies