திருப்பூரில் பெயரளவில் திடக்கழிவு மேலாண்மை : குப்பை மேடானது நொய்யல் ஆறு தீர்வு என்ன?
Jan 14, 2026, 04:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பூரில் பெயரளவில் திடக்கழிவு மேலாண்மை : குப்பை மேடானது நொய்யல் ஆறு தீர்வு என்ன?

Murugesan M by Murugesan M
Dec 6, 2025, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பின்னலாடைக்கு பெயர் போன திருப்பூர் குப்பை நகரமாக மாறிவிடுமோ என்று அச்சத்தில் உள்ளனர் அப்பகுதி மக்கள்…. திடக்கழிவு மேலாண்மை திட்டம் பெயரளவில் உள்ளதாலும், குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்படுவதாலும் திருப்பூரில் சுகாதார சீர்கேடு தலைவிரித்தாடுகிறது… இது குறித்த செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

பின்னலாடை மூலம் அந்நிய செலாவணியை அள்ளிக் கொடுக்கும் திருப்பூரில் இந்த நிலைமை. சாலையோரங்களில் எங்குப் பார்த்தாலும் மலை போல் டன் கணக்கில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள், திருப்பூர் மாநகராட்சியின் அவலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

இந்தியாவின் டாலர் சிட்டி என வர்ணிக்கப்பட்ட திருப்பூர், திமுக மேயர் தினேஷ்குமாரின் அலட்சியத்தாலும், செயல்படாத மாநாகராட்சி நிர்வாகத்தாலும், குப்பை நகரமாக மாறி வருகிறது.. மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகள், முதலில் காளம்பாளையத்தில் பயன்படாத பாறை பள்ளத்தில் கொட்டப்பட்டு வந்த நிலையில், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அங்கு குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்.

மக்களின் போராட்டம் காரணமாக வேலம் பாளையம், பின்னர் முதலிபாளையம், பின்னர் இச்சிப்பட்டி இறுதியாகச் சின்னக்காரி பாளையம் எனக் குப்பை கொட்டும் இடம் மாறியதே தவிர, உருப்படியான திட்டங்களை மாநகராட்சி செயல்படுத்தவில்லை என்கிறார்கள் பாதிக்கப்பட்டடவர்கள்.

இதுபோதாது என்று நொய்யல் ஆற்றின் கரையோரங்களிலும் மாநகராட்சி, குப்பைகளை கொட்டி வருவதால், சுற்றுச்சூழல் சீர்கெட்டுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர் திருப்பூர் மாநகராட்சியில் நாள்தோறும் 700 டன் குப்பைகள் சேகரிக்கப்படும் நிலையில், அதிமுக ஆட்சிக்காலத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் திறம்பட செயல்படுத்தப்பட்ட காரணத்தால், பொதுமக்கள் இடையூறுகளைச் சந்திக்கவில்லை.

ஆனால் கடந்த நான்கு ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் என்றால் என்ன என்று கேட்கும் அளவுக்குத் திருப்பூர் குப்பைகளால் நிரம்பியுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். திருப்பூரை குப்பை நகரமாக மாற்றியுள்ள மாநகராட்சி நிர்வாகம், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தைச் செயல்படுத்தி குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்பதே திருப்பூர் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags: குப்பைநொய்யல் ஆறுnewsSolid waste management in Tiruppur is nominal: What is the solution to the Noyyal Rivera garbage dump?திருப்பூரில் பெயரளவில் திடக்கழிவு மேலாண்மை
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் சுமார் ₹5,000 கோடி ஏப்பம் விட்டு ருசி கண்ட திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

அமைச்சரவை செயலாளர் பிரதமர் மோடியின் வலதுகரம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies