திருப்பூரில் பெயரளவில் திடக்கழிவு மேலாண்மை : குப்பை மேடானது நொய்யல் ஆறு தீர்வு என்ன?
Sep 12, 2026, 08:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பூரில் பெயரளவில் திடக்கழிவு மேலாண்மை : குப்பை மேடானது நொய்யல் ஆறு தீர்வு என்ன?

Murugesan M by Murugesan M
Dec 6, 2025, 07:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பின்னலாடைக்கு பெயர் போன திருப்பூர் குப்பை நகரமாக மாறிவிடுமோ என்று அச்சத்தில் உள்ளனர் அப்பகுதி மக்கள்…. திடக்கழிவு மேலாண்மை திட்டம் பெயரளவில் உள்ளதாலும், குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்படுவதாலும் திருப்பூரில் சுகாதார சீர்கேடு தலைவிரித்தாடுகிறது… இது குறித்த செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

பின்னலாடை மூலம் அந்நிய செலாவணியை அள்ளிக் கொடுக்கும் திருப்பூரில் இந்த நிலைமை. சாலையோரங்களில் எங்குப் பார்த்தாலும் மலை போல் டன் கணக்கில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள், திருப்பூர் மாநகராட்சியின் அவலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

இந்தியாவின் டாலர் சிட்டி என வர்ணிக்கப்பட்ட திருப்பூர், திமுக மேயர் தினேஷ்குமாரின் அலட்சியத்தாலும், செயல்படாத மாநாகராட்சி நிர்வாகத்தாலும், குப்பை நகரமாக மாறி வருகிறது.. மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகள், முதலில் காளம்பாளையத்தில் பயன்படாத பாறை பள்ளத்தில் கொட்டப்பட்டு வந்த நிலையில், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அங்கு குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்.

மக்களின் போராட்டம் காரணமாக வேலம் பாளையம், பின்னர் முதலிபாளையம், பின்னர் இச்சிப்பட்டி இறுதியாகச் சின்னக்காரி பாளையம் எனக் குப்பை கொட்டும் இடம் மாறியதே தவிர, உருப்படியான திட்டங்களை மாநகராட்சி செயல்படுத்தவில்லை என்கிறார்கள் பாதிக்கப்பட்டடவர்கள்.

இதுபோதாது என்று நொய்யல் ஆற்றின் கரையோரங்களிலும் மாநகராட்சி, குப்பைகளை கொட்டி வருவதால், சுற்றுச்சூழல் சீர்கெட்டுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர் திருப்பூர் மாநகராட்சியில் நாள்தோறும் 700 டன் குப்பைகள் சேகரிக்கப்படும் நிலையில், அதிமுக ஆட்சிக்காலத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் திறம்பட செயல்படுத்தப்பட்ட காரணத்தால், பொதுமக்கள் இடையூறுகளைச் சந்திக்கவில்லை.

ஆனால் கடந்த நான்கு ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் என்றால் என்ன என்று கேட்கும் அளவுக்குத் திருப்பூர் குப்பைகளால் நிரம்பியுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். திருப்பூரை குப்பை நகரமாக மாற்றியுள்ள மாநகராட்சி நிர்வாகம், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தைச் செயல்படுத்தி குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்பதே திருப்பூர் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags: குப்பைநொய்யல் ஆறுnewsSolid waste management in Tiruppur is nominal: What is the solution to the Noyyal Rivera garbage dump?திருப்பூரில் பெயரளவில் திடக்கழிவு மேலாண்மை
Share
Tweet
SendShare
Previous Post

சென்னையில் சுமார் ₹5,000 கோடி ஏப்பம் விட்டு ருசி கண்ட திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

அமைச்சரவை செயலாளர் பிரதமர் மோடியின் வலதுகரம்!

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

Load More

அண்மைச் செய்திகள்

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies