இந்தியாவுக்கு மலிவான, சுத்தமான மின்சாரம் : கூடங்குளம் பற்றி ரஷ்ய அதிபர் புதின் சொன்னது என்ன?
Jan 14, 2026, 02:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவுக்கு மலிவான, சுத்தமான மின்சாரம் : கூடங்குளம் பற்றி ரஷ்ய அதிபர் புதின் சொன்னது என்ன?

Murugesan M by Murugesan M
Dec 6, 2025, 09:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 6 அணு உலைகளும் முழுமையான செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அணுஉலை அமைக்கும் பணிகள் புதிய வேகம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் மிகப்பெரிய அணுமின் நிலையமாக இருப்பது தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையம்தான்… இங்குள்ள 6 அணுமின் நிலையங்களில் இரண்டு ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள நிலையில், 6 அணுமின் நிலையங்களையும் முழுமையாகப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர ரஷ்யா உறுதியளித்துள்ளது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, புதின் இந்த உறுதியை அளித்திருக்கிறார். அதன்படி இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான கூடங்குளத்தை கட்டுவதற்கான முதன்மை திட்டத்தைச் செயல்படுத்தி வருவதாகக் கூறினார்.

ஆறு அணு உலைகளில் இரண்டு ஏற்கனவே எரிசக்தி வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய புதின், கட்டுமானத்தில் உள்ள 4 அணு உலைகளிலும் முழுமையான மின் உற்பத்திக்குக் கொண்டு வருவதாக இந்தியாவின் எரிசக்தி தேவையில் முக்கிய பங்களிப்பை வழங்கும் என்றும் தெரிவித்தார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 3வது உலையைச் செயல்படுத்துவதற்கான அணு எரிபொருளின் முதல் தொகுதி வழங்கப்பட்டதை ரஷ்யாவின் அரசு அணுசக்தி நிறுவனமான ரோசாட்டம் அறிக்கை வெளியிட்ட நிலையில், ரஷ்யா அதிபர் புதின் பேச்சு அப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, சிறிய அணு உலைகள், மிதக்கும் அணுமின் நிலையங்கள் மற்றும் மருத்துவம் அல்லது விவசாயம் போன்ற அணு தொழில்நுட்பங்களின் ஆற்றல் அல்லாத பயன்பாடுகள் குறித்தும் இரு தலைவர்கள் விரிவாக ஆலோசித்தனர்.

முன்னதாக, பேசிய ரஷ்ய அதிபர் புதின், ரஷ்யா, பெலாரசில் இருந்து இந்திய பெருங்கடல் வழியே சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் துவங்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்தியாவிற்கு தங்கள் நாடு தொடர்ந்து கச்சா எண்ணெயை வழங்கும் என்றும், இருநாடுகளுக்கு இடையே கடந்த ஆண்டு 6.20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் வர்த்தகம் நடைபெற்றுள்ளதாகக் கூறினார். மேலும் இந்தியா – ரஷ்யா இடையேயான பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் திருப்தியாக இருந்தது என்று ரஷ்ய அதிபர் புதின் குறிப்பிட்டுள்ளார்.

Tags: PM Modiputinஇந்தியாரஷ்ய அதிபர் புதின்கூடங்குளம்Cheapclean electricity for India: What did Russian President Putin say about Kudankulam?
ShareTweetSendShare
Previous Post

இண்டிகோ விமானங்கள் ரத்து : பயணிகளுக்கு கட்டணம் திரும்ப கிடைக்குமா?

Next Post

உக்ரைன் போரில் நிலைப்பாடு என்ன? : உண்மையின் பக்கமே இந்தியா – பிரதமர் மோடி உறுதி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies