உக்ரைன் போரில் நிலைப்பாடு என்ன? : உண்மையின் பக்கமே இந்தியா - பிரதமர் மோடி உறுதி!
Jun 15, 2026, 02:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உக்ரைன் போரில் நிலைப்பாடு என்ன? : உண்மையின் பக்கமே இந்தியா – பிரதமர் மோடி உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 7, 2025, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்ய அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, உக்ரைன் போரில் நடுநிலை வகிக்காமல் அமைதியின் பக்கமே இந்தியா நிற்கிறது என்று தெரிவித்துள்ளார். இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

23வது இந்திய ரஷ்யா உச்சி மாநாட்டுக்காக இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதினுக்கு குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி முன்னிலையில் ராணுவ அணிவகுப்புடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப் பட்டது.

அதன் பிறகு,டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும் அதிபர் புதினும் அதிகாரப்பூர்வ இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.

பிரதமரின் அழைப்பை ஏற்று இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதின், பிரதமரின் அழைப்புக்கு நன்றி தெரிவித்ததுடன், உக்ரைனில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொண்டதாகவும் அமைதியான தீர்வுக்கான ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், உக்ரைன் விவகாரத்தில் தீர்வு காண்பதில் அதிக கவனம் செலுத்தும் பிரதமர் மோடிக்கு மீண்டும் நன்றி தெரிவித்த அதிபர் புதின், வரலாற்றில் ஆழமாக வேரூன்றியுள்ள இந்திய- ரஷ்ய உறவு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டுகளில், இந்திய- ரஷ்ய உறவை வளர்ப்பதற்குப் பிரதமர் மோடி, பெரும் பணிகளைச் செய்துள்ளதாக கூறிய அதிபர் புதின், உயர் தொழில்நுட்பம் சார்ந்த விண்வெளி ஆய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட கூடுதல் துறைகளில் இந்தியாவுடனே ஒத்துழைப்பை ரஷ்யா வழங்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.

உலகின் நலன் அமைதிப் பாதையின் மூலமே உருவாகும் என்றும், ஒன்றாக அமைதிக்கான வழிகளைத் தேட வேண்டும் என்றும், தொடர்ந்து எடுத்துவரும் முயற்சிகளால், மீண்டும் ஒருமுறை உலகம் அமைதிக்குத் திரும்பும் என்று நம்புவதாகவும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், கோவிட் முதல் இன்றுவரை, உலகம் பல நெருக்கடிகளைக் கடந்து வந்துள்ளதாகவும், மிக விரைவில் உலகம் ஒரு புதிய நம்பிக்கையைப் பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உலகத் தலைவர்களுடன் உக்ரைன் போர் குறித்து விரிவாக விவாதித்த போதெல்லாம், இந்தியா நடுநிலையாக இல்லை என்றும் உண்மையின் பக்கமே நிற்கிறது என்றும் எப்போதும் கூறி வருவதாக தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியாவின் தெளிவான இந்த நிலைப்பாடு அமைதிக்கானது என்றும் அமைதிக்கான ஒவ்வொரு முயற்சியையும் இந்தியா ஆதரிக்கும் என்றும் கூறியுள்ளார்.

Tags: IndiarussiaRussian president putinprime minister modiUkraine war
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவுக்கு மலிவான, சுத்தமான மின்சாரம் : கூடங்குளம் பற்றி ரஷ்ய அதிபர் புதின் சொன்னது என்ன?

Next Post

கோவா நைட் கிளப் சிலிண்டர் விபத்து – 23 பேர் பலி!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies