உக்ரைன் போரில் நிலைப்பாடு என்ன? : உண்மையின் பக்கமே இந்தியா - பிரதமர் மோடி உறுதி!
Sep 5, 2026, 02:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உக்ரைன் போரில் நிலைப்பாடு என்ன? : உண்மையின் பக்கமே இந்தியா – பிரதமர் மோடி உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 7, 2025, 09:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரஷ்ய அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, உக்ரைன் போரில் நடுநிலை வகிக்காமல் அமைதியின் பக்கமே இந்தியா நிற்கிறது என்று தெரிவித்துள்ளார். இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

23வது இந்திய ரஷ்யா உச்சி மாநாட்டுக்காக இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதினுக்கு குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி முன்னிலையில் ராணுவ அணிவகுப்புடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப் பட்டது.

அதன் பிறகு,டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும் அதிபர் புதினும் அதிகாரப்பூர்வ இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.

பிரதமரின் அழைப்பை ஏற்று இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதின், பிரதமரின் அழைப்புக்கு நன்றி தெரிவித்ததுடன், உக்ரைனில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொண்டதாகவும் அமைதியான தீர்வுக்கான ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், உக்ரைன் விவகாரத்தில் தீர்வு காண்பதில் அதிக கவனம் செலுத்தும் பிரதமர் மோடிக்கு மீண்டும் நன்றி தெரிவித்த அதிபர் புதின், வரலாற்றில் ஆழமாக வேரூன்றியுள்ள இந்திய- ரஷ்ய உறவு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டுகளில், இந்திய- ரஷ்ய உறவை வளர்ப்பதற்குப் பிரதமர் மோடி, பெரும் பணிகளைச் செய்துள்ளதாக கூறிய அதிபர் புதின், உயர் தொழில்நுட்பம் சார்ந்த விண்வெளி ஆய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட கூடுதல் துறைகளில் இந்தியாவுடனே ஒத்துழைப்பை ரஷ்யா வழங்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.

உலகின் நலன் அமைதிப் பாதையின் மூலமே உருவாகும் என்றும், ஒன்றாக அமைதிக்கான வழிகளைத் தேட வேண்டும் என்றும், தொடர்ந்து எடுத்துவரும் முயற்சிகளால், மீண்டும் ஒருமுறை உலகம் அமைதிக்குத் திரும்பும் என்று நம்புவதாகவும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், கோவிட் முதல் இன்றுவரை, உலகம் பல நெருக்கடிகளைக் கடந்து வந்துள்ளதாகவும், மிக விரைவில் உலகம் ஒரு புதிய நம்பிக்கையைப் பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உலகத் தலைவர்களுடன் உக்ரைன் போர் குறித்து விரிவாக விவாதித்த போதெல்லாம், இந்தியா நடுநிலையாக இல்லை என்றும் உண்மையின் பக்கமே நிற்கிறது என்றும் எப்போதும் கூறி வருவதாக தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியாவின் தெளிவான இந்த நிலைப்பாடு அமைதிக்கானது என்றும் அமைதிக்கான ஒவ்வொரு முயற்சியையும் இந்தியா ஆதரிக்கும் என்றும் கூறியுள்ளார்.

Tags: Ukraine warIndiarussiaRussian president putinprime minister modi
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவுக்கு மலிவான, சுத்தமான மின்சாரம் : கூடங்குளம் பற்றி ரஷ்ய அதிபர் புதின் சொன்னது என்ன?

Next Post

கோவா நைட் கிளப் சிலிண்டர் விபத்து – 23 பேர் பலி!

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies