இந்தியாவுக்கு மலிவான, சுத்தமான மின்சாரம் : கூடங்குளம் பற்றி ரஷ்ய அதிபர் புதின் சொன்னது என்ன?
Sep 12, 2026, 12:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவுக்கு மலிவான, சுத்தமான மின்சாரம் : கூடங்குளம் பற்றி ரஷ்ய அதிபர் புதின் சொன்னது என்ன?

Murugesan M by Murugesan M
Dec 6, 2025, 09:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 6 அணு உலைகளும் முழுமையான செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அணுஉலை அமைக்கும் பணிகள் புதிய வேகம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் மிகப்பெரிய அணுமின் நிலையமாக இருப்பது தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையம்தான்… இங்குள்ள 6 அணுமின் நிலையங்களில் இரண்டு ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள நிலையில், 6 அணுமின் நிலையங்களையும் முழுமையாகப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர ரஷ்யா உறுதியளித்துள்ளது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, புதின் இந்த உறுதியை அளித்திருக்கிறார். அதன்படி இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான கூடங்குளத்தை கட்டுவதற்கான முதன்மை திட்டத்தைச் செயல்படுத்தி வருவதாகக் கூறினார்.

ஆறு அணு உலைகளில் இரண்டு ஏற்கனவே எரிசக்தி வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய புதின், கட்டுமானத்தில் உள்ள 4 அணு உலைகளிலும் முழுமையான மின் உற்பத்திக்குக் கொண்டு வருவதாக இந்தியாவின் எரிசக்தி தேவையில் முக்கிய பங்களிப்பை வழங்கும் என்றும் தெரிவித்தார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 3வது உலையைச் செயல்படுத்துவதற்கான அணு எரிபொருளின் முதல் தொகுதி வழங்கப்பட்டதை ரஷ்யாவின் அரசு அணுசக்தி நிறுவனமான ரோசாட்டம் அறிக்கை வெளியிட்ட நிலையில், ரஷ்யா அதிபர் புதின் பேச்சு அப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, சிறிய அணு உலைகள், மிதக்கும் அணுமின் நிலையங்கள் மற்றும் மருத்துவம் அல்லது விவசாயம் போன்ற அணு தொழில்நுட்பங்களின் ஆற்றல் அல்லாத பயன்பாடுகள் குறித்தும் இரு தலைவர்கள் விரிவாக ஆலோசித்தனர்.

முன்னதாக, பேசிய ரஷ்ய அதிபர் புதின், ரஷ்யா, பெலாரசில் இருந்து இந்திய பெருங்கடல் வழியே சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் துவங்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்தியாவிற்கு தங்கள் நாடு தொடர்ந்து கச்சா எண்ணெயை வழங்கும் என்றும், இருநாடுகளுக்கு இடையே கடந்த ஆண்டு 6.20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் வர்த்தகம் நடைபெற்றுள்ளதாகக் கூறினார். மேலும் இந்தியா – ரஷ்யா இடையேயான பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் திருப்தியாக இருந்தது என்று ரஷ்ய அதிபர் புதின் குறிப்பிட்டுள்ளார்.

Tags: கூடங்குளம்Cheapclean electricity for India: What did Russian President Putin say about Kudankulam?PM Modiputinஇந்தியாரஷ்ய அதிபர் புதின்
Share
Tweet
SendShare
Previous Post

இண்டிகோ விமானங்கள் ரத்து : பயணிகளுக்கு கட்டணம் திரும்ப கிடைக்குமா?

Next Post

உக்ரைன் போரில் நிலைப்பாடு என்ன? : உண்மையின் பக்கமே இந்தியா – பிரதமர் மோடி உறுதி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies