இந்தியாவுக்கு மலிவான, சுத்தமான மின்சாரம் : கூடங்குளம் பற்றி ரஷ்ய அதிபர் புதின் சொன்னது என்ன?
Jul 28, 2026, 07:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவுக்கு மலிவான, சுத்தமான மின்சாரம் : கூடங்குளம் பற்றி ரஷ்ய அதிபர் புதின் சொன்னது என்ன?

Murugesan M by Murugesan M
Dec 6, 2025, 09:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 6 அணு உலைகளும் முழுமையான செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அணுஉலை அமைக்கும் பணிகள் புதிய வேகம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் மிகப்பெரிய அணுமின் நிலையமாக இருப்பது தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையம்தான்… இங்குள்ள 6 அணுமின் நிலையங்களில் இரண்டு ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள நிலையில், 6 அணுமின் நிலையங்களையும் முழுமையாகப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர ரஷ்யா உறுதியளித்துள்ளது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, புதின் இந்த உறுதியை அளித்திருக்கிறார். அதன்படி இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான கூடங்குளத்தை கட்டுவதற்கான முதன்மை திட்டத்தைச் செயல்படுத்தி வருவதாகக் கூறினார்.

ஆறு அணு உலைகளில் இரண்டு ஏற்கனவே எரிசக்தி வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய புதின், கட்டுமானத்தில் உள்ள 4 அணு உலைகளிலும் முழுமையான மின் உற்பத்திக்குக் கொண்டு வருவதாக இந்தியாவின் எரிசக்தி தேவையில் முக்கிய பங்களிப்பை வழங்கும் என்றும் தெரிவித்தார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 3வது உலையைச் செயல்படுத்துவதற்கான அணு எரிபொருளின் முதல் தொகுதி வழங்கப்பட்டதை ரஷ்யாவின் அரசு அணுசக்தி நிறுவனமான ரோசாட்டம் அறிக்கை வெளியிட்ட நிலையில், ரஷ்யா அதிபர் புதின் பேச்சு அப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, சிறிய அணு உலைகள், மிதக்கும் அணுமின் நிலையங்கள் மற்றும் மருத்துவம் அல்லது விவசாயம் போன்ற அணு தொழில்நுட்பங்களின் ஆற்றல் அல்லாத பயன்பாடுகள் குறித்தும் இரு தலைவர்கள் விரிவாக ஆலோசித்தனர்.

முன்னதாக, பேசிய ரஷ்ய அதிபர் புதின், ரஷ்யா, பெலாரசில் இருந்து இந்திய பெருங்கடல் வழியே சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் துவங்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்தியாவிற்கு தங்கள் நாடு தொடர்ந்து கச்சா எண்ணெயை வழங்கும் என்றும், இருநாடுகளுக்கு இடையே கடந்த ஆண்டு 6.20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் வர்த்தகம் நடைபெற்றுள்ளதாகக் கூறினார். மேலும் இந்தியா – ரஷ்யா இடையேயான பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் திருப்தியாக இருந்தது என்று ரஷ்ய அதிபர் புதின் குறிப்பிட்டுள்ளார்.

Tags: கூடங்குளம்Cheapclean electricity for India: What did Russian President Putin say about Kudankulam?PM Modiputinஇந்தியாரஷ்ய அதிபர் புதின்
ShareTweetSendShare
Previous Post

இண்டிகோ விமானங்கள் ரத்து : பயணிகளுக்கு கட்டணம் திரும்ப கிடைக்குமா?

Next Post

உக்ரைன் போரில் நிலைப்பாடு என்ன? : உண்மையின் பக்கமே இந்தியா – பிரதமர் மோடி உறுதி!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies