பாகிஸ்தானுடன் இணைந்து சீனா, துருக்கி விஷமத்தனம் - விரைவில் ஆப்ரேஷன் சிந்தூர் 2.0?
Apr 30, 2026, 07:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தானுடன் இணைந்து சீனா, துருக்கி விஷமத்தனம் – விரைவில் ஆப்ரேஷன் சிந்தூர் 2.0?

Murugesan M by Murugesan M
Dec 17, 2025, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இரண்டாம் கட்ட ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தவிர்க்க முடியாதது என்றும், அதற்கு இந்தியா தயாராக வேண்டும் என்றும் Land Warfare Studies மையத்தின் இயக்குனரும் ஓய்வுபெற்ற இந்திய ராணுவ அதிகாரியும் ஆன லெப்டினன்ட் ஜெனரல் துஷ்யந்த் சிங் தெரிவித்துள்ளார். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

1968 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நிர்மல் ஜித் சிங் ஷெகோன், “பறக்கும் தோட்டாக்கள்” என்று அழைக்கப்படும் 18ம் எண் படைப்பிரிவில் விமானியாக நியமிக்கப்பட்டார். 1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போர் தொடங்கியது. இருநாடுகளுக்கும் இடையேயான எல்லை போர்க்களமாக மாறியது. அப்போது ஸ்ரீநகரை தளமாகக் கொண்ட க்னாட் பிரிவின் விமானியாக ஷெகோன் களத்தில் துணிச்சலுடன் செயல்பட்டார்.

1971ஆம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி, பதான்கோட், ஸ்ரீநகர் மற்றும் அமிர்தசரஸ் விமானநிலையங்களை நோக்கி, பாகிஸ்தான் விமானப்படை இடைவிடாத தாக்குதல்களை நடத்திய போதும் துணிச்சலாக எதிர்கொண்டு, நாட்டுக்காகத் தன்னுயிரை நிர்மல் ஜித் சிங் ஷெகோன் தியாகம் செய்தார். பரம் வீர் சக்ரா விருதால் கௌரவிக்கப்பட்ட பெற்ற ஒரே இந்திய விமானப்படை அதிகாரி என்ற பெருமையைப் பெற்ற நிர்மல் ஜித் சிங் ஷெகோன் வீரத்தைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் இந்திய விமானப்படை நினைவுச் சொற்பொழிவுகள் நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு, குஜராத் கிளையின் விமானப்படை சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்ட ஓய்வுபெற்ற இந்திய ராணுவ அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் துஷ்யந்த் சிங், ஆப்ரேஷன் சிந்தூர் முடிவு அல்ல, புதிய வியூகத்தின் தொடக்கம் என்று கூறியுள்ளார். சீனா மற்றும் துருக்கியின் ஆதரவுடன் காஷ்மீர் மீது பாகிஸ்தான் அதிக கவனம் செலுத்திவருவதால், இன்னொரு ஆப்ரேஷன் சிந்தூர் தவிர்க்க முடியாதது என்று கூறிய துஷ்யந்த் சிங், அதற்காக இந்திய இராணுவம் தயாராக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானின் பலவீனங்களை அம்பலப்படுத்திய ஆபரேஷன் சிந்தூரின் வெற்றி, பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்குவதில் இந்தியா எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் அணு ஆயுத வரம்புக்குக் கீழே செயல்படுவதற்கான உறுதியையும் நிரூபித்தது என்று கூறியுள்ளார். 1971 போருக்குப் பிறகு முதல் முறையாக, நாட்டின் முப்படைகளின் சினெர்ஜி மேம்படுத்தப்பட்டதாகவும் அரசியல் தெளிவு, ராணுவ துல்லியம், வான் பாதுகாப்பு என ஆப்ரேஷன் சிந்தூர் உலகத்தையே ஆச்சரியப்படுத்தியது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் நடந்த 4 நாட்களில், அரசின் இணைய தளங்கள் மீதான சைபர் தாக்குதல்கள் ஏழு மடங்கு அதிகரித்தது என்று குறிப்பிட்ட சிங், மின்சாரத் துறை கிட்டத்தட்ட இரண்டு லட்சம் சைபர் தாக்குதல்களைச் சந்தித்தது என்றும், தேசிய பங்குச் சந்தை சுமார் 40 கோடி சைபர் தாக்குதல்களைச் சந்தித்தது என்றும் ஆனால், இந்திய ராணுவமும் இந்தத் தாக்குதல்களை முற்றிலுமாக இடைமறித்து அழித்தது என்றும் துஷ்யந்த் சிங் கூறியுள்ளார்.

பாகிஸ்தானும், சீனாவும் சமூக ஊடகங்களில் எதிர்-கதைகளை தீவிரமாகப் பரப்புகின்றன என்பதைச் சுட்டிக் காட்டிய லெப்டினன்ட் ஜெனரல் துஷ்யந்த் சிங், தகவல்தொடர்புகளை மேம்படுத்துவதற்கும் தவறான தகவல்களைத் திறம்பட எதிர்ப்பதற்கும் ஆவணப்படுத்தப்பட்ட ஒரு தேசிய பாதுகாப்பு வியூகத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் இராணுவம் காஷ்மீரை ஒரு முக்கிய பிரச்சினையாக இன்னமும் உயிர்ப்புடன் வைத்துள்ளதால் எதிர்காலத்தில் எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதலுக்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ள சிங், உளவுத்துறை, பாதுகாப்புச் செலவு மற்றும் பன்முகத்தன்மையுடன் கூடிய போர் திறன்களில் சீர்திருத்தங்களை கொண்டுவரவேண்டும் என்றும், எதிரியின் தாக்குதலைத் தடுக்கவும் தீர்க்கமாக பதிலடி கொடுக்கவும் முப்படைகள் தயாராக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Tags: chinaindian armyTurkey join hands with Pakistan in poisoning - Operation Sindoor 2.0 soon?PM Modipakistan
ShareTweetSendShare
Previous Post

அனந்த் அம்பானியின் “வன்தாரா” பராமரிப்பு மையத்தில் மெஸ்ஸி : இந்திய கலாச்சாரத்தையும், மனித நேய பணிகளையும் ஒருசேர அறிந்த தருணம்!

Next Post

உலகளாவிய பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான் – ஐநாவில் தோலுரித்த இந்தியா!

Related News

மேற்குவங்க இறுதிகட்ட தேர்தல் – 91.71 % வாக்குகள் பதிவு!

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

புதுச்சேரியில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஐபிஎல் கிரிக்கெட் – மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் வெற்றி!

தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுகிறது தவெக – ஆக்சிஸ் மை இண்டியா கருத்துக்கணிப்பு!

தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சி – பீப்பில்ஸ் பல்ஸ், சாணக்யா, பி மார்க் கருத்துக்கணிப்பு!

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies