பாகிஸ்தானுடன் இணைந்து சீனா, துருக்கி விஷமத்தனம் - விரைவில் ஆப்ரேஷன் சிந்தூர் 2.0?
Sep 12, 2026, 01:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தானுடன் இணைந்து சீனா, துருக்கி விஷமத்தனம் – விரைவில் ஆப்ரேஷன் சிந்தூர் 2.0?

Murugesan M by Murugesan M
Dec 17, 2025, 08:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இரண்டாம் கட்ட ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தவிர்க்க முடியாதது என்றும், அதற்கு இந்தியா தயாராக வேண்டும் என்றும் Land Warfare Studies மையத்தின் இயக்குனரும் ஓய்வுபெற்ற இந்திய ராணுவ அதிகாரியும் ஆன லெப்டினன்ட் ஜெனரல் துஷ்யந்த் சிங் தெரிவித்துள்ளார். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

1968 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நிர்மல் ஜித் சிங் ஷெகோன், “பறக்கும் தோட்டாக்கள்” என்று அழைக்கப்படும் 18ம் எண் படைப்பிரிவில் விமானியாக நியமிக்கப்பட்டார். 1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போர் தொடங்கியது. இருநாடுகளுக்கும் இடையேயான எல்லை போர்க்களமாக மாறியது. அப்போது ஸ்ரீநகரை தளமாகக் கொண்ட க்னாட் பிரிவின் விமானியாக ஷெகோன் களத்தில் துணிச்சலுடன் செயல்பட்டார்.

1971ஆம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி, பதான்கோட், ஸ்ரீநகர் மற்றும் அமிர்தசரஸ் விமானநிலையங்களை நோக்கி, பாகிஸ்தான் விமானப்படை இடைவிடாத தாக்குதல்களை நடத்திய போதும் துணிச்சலாக எதிர்கொண்டு, நாட்டுக்காகத் தன்னுயிரை நிர்மல் ஜித் சிங் ஷெகோன் தியாகம் செய்தார். பரம் வீர் சக்ரா விருதால் கௌரவிக்கப்பட்ட பெற்ற ஒரே இந்திய விமானப்படை அதிகாரி என்ற பெருமையைப் பெற்ற நிர்மல் ஜித் சிங் ஷெகோன் வீரத்தைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் இந்திய விமானப்படை நினைவுச் சொற்பொழிவுகள் நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு, குஜராத் கிளையின் விமானப்படை சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்ட ஓய்வுபெற்ற இந்திய ராணுவ அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் துஷ்யந்த் சிங், ஆப்ரேஷன் சிந்தூர் முடிவு அல்ல, புதிய வியூகத்தின் தொடக்கம் என்று கூறியுள்ளார். சீனா மற்றும் துருக்கியின் ஆதரவுடன் காஷ்மீர் மீது பாகிஸ்தான் அதிக கவனம் செலுத்திவருவதால், இன்னொரு ஆப்ரேஷன் சிந்தூர் தவிர்க்க முடியாதது என்று கூறிய துஷ்யந்த் சிங், அதற்காக இந்திய இராணுவம் தயாராக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானின் பலவீனங்களை அம்பலப்படுத்திய ஆபரேஷன் சிந்தூரின் வெற்றி, பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்குவதில் இந்தியா எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் அணு ஆயுத வரம்புக்குக் கீழே செயல்படுவதற்கான உறுதியையும் நிரூபித்தது என்று கூறியுள்ளார். 1971 போருக்குப் பிறகு முதல் முறையாக, நாட்டின் முப்படைகளின் சினெர்ஜி மேம்படுத்தப்பட்டதாகவும் அரசியல் தெளிவு, ராணுவ துல்லியம், வான் பாதுகாப்பு என ஆப்ரேஷன் சிந்தூர் உலகத்தையே ஆச்சரியப்படுத்தியது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் நடந்த 4 நாட்களில், அரசின் இணைய தளங்கள் மீதான சைபர் தாக்குதல்கள் ஏழு மடங்கு அதிகரித்தது என்று குறிப்பிட்ட சிங், மின்சாரத் துறை கிட்டத்தட்ட இரண்டு லட்சம் சைபர் தாக்குதல்களைச் சந்தித்தது என்றும், தேசிய பங்குச் சந்தை சுமார் 40 கோடி சைபர் தாக்குதல்களைச் சந்தித்தது என்றும் ஆனால், இந்திய ராணுவமும் இந்தத் தாக்குதல்களை முற்றிலுமாக இடைமறித்து அழித்தது என்றும் துஷ்யந்த் சிங் கூறியுள்ளார்.

பாகிஸ்தானும், சீனாவும் சமூக ஊடகங்களில் எதிர்-கதைகளை தீவிரமாகப் பரப்புகின்றன என்பதைச் சுட்டிக் காட்டிய லெப்டினன்ட் ஜெனரல் துஷ்யந்த் சிங், தகவல்தொடர்புகளை மேம்படுத்துவதற்கும் தவறான தகவல்களைத் திறம்பட எதிர்ப்பதற்கும் ஆவணப்படுத்தப்பட்ட ஒரு தேசிய பாதுகாப்பு வியூகத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் இராணுவம் காஷ்மீரை ஒரு முக்கிய பிரச்சினையாக இன்னமும் உயிர்ப்புடன் வைத்துள்ளதால் எதிர்காலத்தில் எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதலுக்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ள சிங், உளவுத்துறை, பாதுகாப்புச் செலவு மற்றும் பன்முகத்தன்மையுடன் கூடிய போர் திறன்களில் சீர்திருத்தங்களை கொண்டுவரவேண்டும் என்றும், எதிரியின் தாக்குதலைத் தடுக்கவும் தீர்க்கமாக பதிலடி கொடுக்கவும் முப்படைகள் தயாராக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Tags: Turkey join hands with Pakistan in poisoning - Operation Sindoor 2.0 soon?PM Modipakistanchinaindian army
Share
Tweet
SendShare
Previous Post

அனந்த் அம்பானியின் “வன்தாரா” பராமரிப்பு மையத்தில் மெஸ்ஸி : இந்திய கலாச்சாரத்தையும், மனித நேய பணிகளையும் ஒருசேர அறிந்த தருணம்!

Next Post

உலகளாவிய பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான் – ஐநாவில் தோலுரித்த இந்தியா!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies