மன்னிப்புக் கேட்க முடியாது: ராகுல்காந்தி பிடிவாதம்!
Jan 13, 2026, 11:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மன்னிப்புக் கேட்க முடியாது: ராகுல்காந்தி பிடிவாதம்!

அவதூறு வழக்கில் ஒருபோதும் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை என்று ராகுல் காந்தி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுபிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 3, 2023, 03:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் முன்னாள் எம்.பி.யுமான ராகுல் காந்தி, எல்லா திருடர்களுக்கும் மோடி என்கிற பொதுவான பெயர் இருப்பது எப்படி என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதையடுத்து, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி, ராகுல் காந்தி மீது சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும், 15,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இதன் காரணமாக, ராகுல் காந்தி எம்.பி. பதவியை இழந்தார்.

இதைத் தொடர்ந்து, தீர்ப்பை ரத்து செய்யக்கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த குஜராத் நீதிமன்றம் தண்டனையை ரத்து செய்ய மறுத்து விட்டது.

தண்டனையை ரத்து செய்யக்கோரி ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேற்கண்ட மனுவுக்கு பதிலளிக்குமாறு குஜராத் அரசுக்கும், வழக்குத் தொடர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடிக்கும் உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, புர்னேஷ் மோடி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், “ஒரு சமூகத்தின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத, ஆணவ குணம் கொண்ட ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்காமல், அவரது மேல்முறையீட்டு மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த பதில் மனுவுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ராகுல் காந்தி தரப்பில் மறுபிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், “ஐ.ஏ.என்.எஸ். கட்டுரையின் வாட்ஸ் ஆப் ஸ்கிரீன் ஷாட்டில் இருந்து தங்களுக்குச் சாதகமான பாயின்ட்களை மட்டும் எடுத்துக் கொண்டு வழக்கை சித்தரித்திருக்கிறார்கள். ஆனால், அந்த வாட்ஸ் ஆப் செய்தியின் ஆதாரத்தை வெளியிட மனுதாரர் தவறிவிட்டார். தவிர, நீரவ் மோடி, லலித் மோடி போன்ற குடும்ப பெயர்கள் ஒரே சமூகத்தையோ, ஜாதியையோ குறிப்பதில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, ராகுல் காந்தி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்லாது, எதிர்க்கட்சியின் தலைவர். அந்த வகையில், ஆளும் அரசின் நடத்தை மற்றும் செயல்திறனை விமர்சிப்பது எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு வழக்கமான ஒன்றுதான். ஆகவே, ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்ட தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது. மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் அதை ராகுல் காந்தி எப்போதோ செய்திருப்பார். எனவே, மேற்கண்ட அவதூறு வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி ஒருபோதும் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை.

மேலும், தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைப்பதால், புகார்தாரரான பா.ஜ.க. எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடிக்கு ஏற்படப்போகும் பாதிப்பு குறித்து பதில் மனுவில் தெளிவாக இல்லை. எனவே, தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்கும் வகையிலும், எதிர்வரும் கூட்டத்தொடரில் பங்கேற்கும் வகையிலும் மேல்முறையீடு மனுவை விசாரித்து முடிக்கும் வரை ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: supreme courtrahulgandhi
ShareTweetSendShare
Previous Post

அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் வீட்டில் ஒரே நாளில் வருமான வரித்துறை அமலாக்கத் துறை அதிரடி சோதனை!

Next Post

மக்களைக் கவர்ந்த உண்ணிக் குச்சி யானைகள்

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies