மன்னிப்புக் கேட்க முடியாது: ராகுல்காந்தி பிடிவாதம்!
Sep 13, 2026, 03:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மன்னிப்புக் கேட்க முடியாது: ராகுல்காந்தி பிடிவாதம்!

அவதூறு வழக்கில் ஒருபோதும் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை என்று ராகுல் காந்தி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுபிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 3, 2023, 03:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் முன்னாள் எம்.பி.யுமான ராகுல் காந்தி, எல்லா திருடர்களுக்கும் மோடி என்கிற பொதுவான பெயர் இருப்பது எப்படி என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதையடுத்து, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி, ராகுல் காந்தி மீது சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும், 15,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இதன் காரணமாக, ராகுல் காந்தி எம்.பி. பதவியை இழந்தார்.

இதைத் தொடர்ந்து, தீர்ப்பை ரத்து செய்யக்கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த குஜராத் நீதிமன்றம் தண்டனையை ரத்து செய்ய மறுத்து விட்டது.

தண்டனையை ரத்து செய்யக்கோரி ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேற்கண்ட மனுவுக்கு பதிலளிக்குமாறு குஜராத் அரசுக்கும், வழக்குத் தொடர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடிக்கும் உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, புர்னேஷ் மோடி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், “ஒரு சமூகத்தின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத, ஆணவ குணம் கொண்ட ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்காமல், அவரது மேல்முறையீட்டு மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த பதில் மனுவுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ராகுல் காந்தி தரப்பில் மறுபிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், “ஐ.ஏ.என்.எஸ். கட்டுரையின் வாட்ஸ் ஆப் ஸ்கிரீன் ஷாட்டில் இருந்து தங்களுக்குச் சாதகமான பாயின்ட்களை மட்டும் எடுத்துக் கொண்டு வழக்கை சித்தரித்திருக்கிறார்கள். ஆனால், அந்த வாட்ஸ் ஆப் செய்தியின் ஆதாரத்தை வெளியிட மனுதாரர் தவறிவிட்டார். தவிர, நீரவ் மோடி, லலித் மோடி போன்ற குடும்ப பெயர்கள் ஒரே சமூகத்தையோ, ஜாதியையோ குறிப்பதில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, ராகுல் காந்தி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்லாது, எதிர்க்கட்சியின் தலைவர். அந்த வகையில், ஆளும் அரசின் நடத்தை மற்றும் செயல்திறனை விமர்சிப்பது எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு வழக்கமான ஒன்றுதான். ஆகவே, ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்ட தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது. மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் அதை ராகுல் காந்தி எப்போதோ செய்திருப்பார். எனவே, மேற்கண்ட அவதூறு வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி ஒருபோதும் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை.

மேலும், தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைப்பதால், புகார்தாரரான பா.ஜ.க. எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடிக்கு ஏற்படப்போகும் பாதிப்பு குறித்து பதில் மனுவில் தெளிவாக இல்லை. எனவே, தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்கும் வகையிலும், எதிர்வரும் கூட்டத்தொடரில் பங்கேற்கும் வகையிலும் மேல்முறையீடு மனுவை விசாரித்து முடிக்கும் வரை ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: supreme courtrahulgandhi
Share
Tweet
SendShare
Previous Post

அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் வீட்டில் ஒரே நாளில் வருமான வரித்துறை அமலாக்கத் துறை அதிரடி சோதனை!

Next Post

மக்களைக் கவர்ந்த உண்ணிக் குச்சி யானைகள்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies