சுதந்திர தினத்தன்று வீடுதோறும் தேசியக்கொடி… அஞ்சலகங்களில் விற்பனை தொடக்கம்!
Oct 6, 2025, 05:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுதந்திர தினத்தன்று வீடுதோறும் தேசியக்கொடி… அஞ்சலகங்களில் விற்பனை தொடக்கம்!

Web Desk by Web Desk
Aug 5, 2023, 08:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றும்படி பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்திய நிலையில், நாட்டு மக்களுக்கு தேசியக்கொடி கிடைக்கும் வகையில், நாடு முழுவதுமுள்ள 1.6 லட்சம் அஞ்சலகங்களில் தேசியக்கொடி விற்பனை தொடங்கி இருக்கிறது.

நாடு சுதந்திரமடைந்து கடந்தாண்டு 75-வது ஆண்டு தொடங்கியது. இதையொட்டி, நாட்டு மக்களின் இதயங்களில் தேசபக்தி உணர்வை தூண்டும் வகையிலும், பாரத தேசத்தின் மீதான பெருமித உணர்வை ஏற்படுத்தும் வகையிலும், வீடுதோறும் தேசியக்கொடி ஏற்றி, அமிர்தப் பெருவிழாவாக கொண்டாடும்படி பாரத பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

அதன்படி, கடந்தாண்டு 23 கோடி குடும்பங்கள் தங்களது வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி, அமிர்தப் பெருவிழாவை கொண்டாடினர். இவர்களில் 6 கோடி பேர் தேசியக்கொடி ஏற்றியதை செல்ஃபி எடுத்து. சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தனர். இதற்காக, நாட்டு மக்களுக்கு தேசியக்கொடி தட்டுப்பாடின்றிக் கிடைக்கும் வகையில், நாடு முழுவதுமுள்ள அஞ்சலகங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டது.

நாடு சுதந்திரமடைந்து நிகழாண்டோடு 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதையொட்டி, அதே ஆர்வத்தையும், தேசபக்தியையும் தொடரும் வகையில், இந்த ஆண்டும் ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றிக் கொண்டாடுமாறு பாரத பிரதமர் மோடி நாட்டு மக்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இதையொட்டி, நிகழாண்டும் நாட்டு மக்களுக்கு தட்டுப்பாடின்றி தேசியக்கொடி கிடைக்கும் வகையில், நாட்டிலுள்ள 1.6 லட்சம் அஞ்சலகங்கள் மூலம் தேசியக்கொடிகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி, இன்று முதல் அஞ்சல் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை தொடங்கி இருக்கிறது. ஆகவே, பொதுமக்கள் அருகிலுள்ள அஞ்சலகத்திற்குச் சென்று தேசியக்கொடிகளை வாங்கிக் கொள்ளலாம். மேலும், இ-போஸ்ட் வசதி (www.epostoffice.gov.in) மூலமாகவும் மக்கள் தேசியக்கொடிகளை வாங்க முடியும்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டத்துடன் நாட்டு மக்களை இணைக்க அஞ்சலகம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும், மக்கள் பங்கேற்கும் நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்திருக்கிறது. இவற்றில் நாட்டு மக்கள் பங்கேற்று புதிய இந்தியாவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று அஞ்சல் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

மேலும், கடந்தாண்டைப் போலவே, நிகழாண்டும் நாட்டு மக்கள் தங்களது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஏற்றப்பட்ட தேசியக்கொடியுடன் செல்ஃபி எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: Modihar ghar tirangaPOST OFFICEIndia FlagNational Flag
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டு சிறை…

Next Post

நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது சந்திராயன் – 3!

Related News

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை – பயணிகள் அச்சம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

அரசு கேபிளில் தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கும் இடம் வழங்காத பாசிச திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு!

திருமுல்லைவாயல் அருகே கஞ்சா போதையில் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!

சிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – குடோனிலும் தீ பரவியதால் பதற்றம்!

தவெக தலைவர் விஜய் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு – இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் பாயந்தது வழக்கு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies