சுதந்திர தினத்தன்று வீடுதோறும் தேசியக்கொடி… அஞ்சலகங்களில் விற்பனை தொடக்கம்!
Jan 14, 2026, 01:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுதந்திர தினத்தன்று வீடுதோறும் தேசியக்கொடி… அஞ்சலகங்களில் விற்பனை தொடக்கம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 5, 2023, 08:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றும்படி பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்திய நிலையில், நாட்டு மக்களுக்கு தேசியக்கொடி கிடைக்கும் வகையில், நாடு முழுவதுமுள்ள 1.6 லட்சம் அஞ்சலகங்களில் தேசியக்கொடி விற்பனை தொடங்கி இருக்கிறது.

நாடு சுதந்திரமடைந்து கடந்தாண்டு 75-வது ஆண்டு தொடங்கியது. இதையொட்டி, நாட்டு மக்களின் இதயங்களில் தேசபக்தி உணர்வை தூண்டும் வகையிலும், பாரத தேசத்தின் மீதான பெருமித உணர்வை ஏற்படுத்தும் வகையிலும், வீடுதோறும் தேசியக்கொடி ஏற்றி, அமிர்தப் பெருவிழாவாக கொண்டாடும்படி பாரத பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

அதன்படி, கடந்தாண்டு 23 கோடி குடும்பங்கள் தங்களது வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி, அமிர்தப் பெருவிழாவை கொண்டாடினர். இவர்களில் 6 கோடி பேர் தேசியக்கொடி ஏற்றியதை செல்ஃபி எடுத்து. சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தனர். இதற்காக, நாட்டு மக்களுக்கு தேசியக்கொடி தட்டுப்பாடின்றிக் கிடைக்கும் வகையில், நாடு முழுவதுமுள்ள அஞ்சலகங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டது.

நாடு சுதந்திரமடைந்து நிகழாண்டோடு 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதையொட்டி, அதே ஆர்வத்தையும், தேசபக்தியையும் தொடரும் வகையில், இந்த ஆண்டும் ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றிக் கொண்டாடுமாறு பாரத பிரதமர் மோடி நாட்டு மக்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இதையொட்டி, நிகழாண்டும் நாட்டு மக்களுக்கு தட்டுப்பாடின்றி தேசியக்கொடி கிடைக்கும் வகையில், நாட்டிலுள்ள 1.6 லட்சம் அஞ்சலகங்கள் மூலம் தேசியக்கொடிகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி, இன்று முதல் அஞ்சல் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை தொடங்கி இருக்கிறது. ஆகவே, பொதுமக்கள் அருகிலுள்ள அஞ்சலகத்திற்குச் சென்று தேசியக்கொடிகளை வாங்கிக் கொள்ளலாம். மேலும், இ-போஸ்ட் வசதி (www.epostoffice.gov.in) மூலமாகவும் மக்கள் தேசியக்கொடிகளை வாங்க முடியும்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டத்துடன் நாட்டு மக்களை இணைக்க அஞ்சலகம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும், மக்கள் பங்கேற்கும் நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்திருக்கிறது. இவற்றில் நாட்டு மக்கள் பங்கேற்று புதிய இந்தியாவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று அஞ்சல் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

மேலும், கடந்தாண்டைப் போலவே, நிகழாண்டும் நாட்டு மக்கள் தங்களது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஏற்றப்பட்ட தேசியக்கொடியுடன் செல்ஃபி எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: Modihar ghar tirangaPOST OFFICEIndia FlagNational Flag
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டு சிறை…

Next Post

நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது சந்திராயன் – 3!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies