சுதந்திர தினத்தன்று வீடுதோறும் தேசியக்கொடி… அஞ்சலகங்களில் விற்பனை தொடக்கம்!
Sep 5, 2026, 12:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுதந்திர தினத்தன்று வீடுதோறும் தேசியக்கொடி… அஞ்சலகங்களில் விற்பனை தொடக்கம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 5, 2023, 08:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றும்படி பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்திய நிலையில், நாட்டு மக்களுக்கு தேசியக்கொடி கிடைக்கும் வகையில், நாடு முழுவதுமுள்ள 1.6 லட்சம் அஞ்சலகங்களில் தேசியக்கொடி விற்பனை தொடங்கி இருக்கிறது.

நாடு சுதந்திரமடைந்து கடந்தாண்டு 75-வது ஆண்டு தொடங்கியது. இதையொட்டி, நாட்டு மக்களின் இதயங்களில் தேசபக்தி உணர்வை தூண்டும் வகையிலும், பாரத தேசத்தின் மீதான பெருமித உணர்வை ஏற்படுத்தும் வகையிலும், வீடுதோறும் தேசியக்கொடி ஏற்றி, அமிர்தப் பெருவிழாவாக கொண்டாடும்படி பாரத பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

அதன்படி, கடந்தாண்டு 23 கோடி குடும்பங்கள் தங்களது வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி, அமிர்தப் பெருவிழாவை கொண்டாடினர். இவர்களில் 6 கோடி பேர் தேசியக்கொடி ஏற்றியதை செல்ஃபி எடுத்து. சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தனர். இதற்காக, நாட்டு மக்களுக்கு தேசியக்கொடி தட்டுப்பாடின்றிக் கிடைக்கும் வகையில், நாடு முழுவதுமுள்ள அஞ்சலகங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டது.

நாடு சுதந்திரமடைந்து நிகழாண்டோடு 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதையொட்டி, அதே ஆர்வத்தையும், தேசபக்தியையும் தொடரும் வகையில், இந்த ஆண்டும் ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றிக் கொண்டாடுமாறு பாரத பிரதமர் மோடி நாட்டு மக்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இதையொட்டி, நிகழாண்டும் நாட்டு மக்களுக்கு தட்டுப்பாடின்றி தேசியக்கொடி கிடைக்கும் வகையில், நாட்டிலுள்ள 1.6 லட்சம் அஞ்சலகங்கள் மூலம் தேசியக்கொடிகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி, இன்று முதல் அஞ்சல் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை தொடங்கி இருக்கிறது. ஆகவே, பொதுமக்கள் அருகிலுள்ள அஞ்சலகத்திற்குச் சென்று தேசியக்கொடிகளை வாங்கிக் கொள்ளலாம். மேலும், இ-போஸ்ட் வசதி (www.epostoffice.gov.in) மூலமாகவும் மக்கள் தேசியக்கொடிகளை வாங்க முடியும்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டத்துடன் நாட்டு மக்களை இணைக்க அஞ்சலகம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும், மக்கள் பங்கேற்கும் நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்திருக்கிறது. இவற்றில் நாட்டு மக்கள் பங்கேற்று புதிய இந்தியாவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று அஞ்சல் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

மேலும், கடந்தாண்டைப் போலவே, நிகழாண்டும் நாட்டு மக்கள் தங்களது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஏற்றப்பட்ட தேசியக்கொடியுடன் செல்ஃபி எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: Modihar ghar tirangaPOST OFFICEIndia FlagNational Flag
Share
Tweet
SendShare
Previous Post

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டு சிறை…

Next Post

நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது சந்திராயன் – 3!

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies