ரஷ்யா – உக்ரைன் போர்: நிரந்தர தீர்வு காண இந்தியா தயார் - அஜித் தோவல் உறுதி!
Oct 19, 2025, 03:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரஷ்யா – உக்ரைன் போர்: நிரந்தர தீர்வு காண இந்தியா தயார் – அஜித் தோவல் உறுதி!

Web Desk by Web Desk
Aug 6, 2023, 01:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யா – உக்ரைன் இடையே நடக்கும் போருக்கு நிரந்தரத் தீர்வு காண இந்தியா தயாராக இருக்கிறது. இதைவிட வேறு எதுவும் இந்தியாவுக்கு மகிழ்ச்சியைத் தராது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்திருக்கிறார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்களையும் இணைத்துக் கொள்ள உக்ரைன் முடிவு செய்தது. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா, கடந்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கிறது. போர் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், ஒட்டுமொத்த உலகமும் கடும் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகின்றன. ஆகவே, போரை நிறுத்துவதற்கான முயற்சிகளை உலக நாடுகள் ஒருகிணைந்து மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உக்ரைன் போர் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பான 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டை சவூதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் 40 நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றிருக்கிறார்.

இம்மாநாட்டில் நேற்றைய நிகழ்வின்போது பேசிய அஜித் தோவல், “ரஷ்யா – உக்ரைன் இடையே நடந்துவரும் போருக்கு நிரந்தரத் தீர்வு காண இந்தியா தயாராக இருக்கிறது. இதைவிட இந்தியாவுக்கு வேறு எதுவும் மகிழ்ச்சியையும், திருப்தியையும் அளிக்காது. இரு நாடுகளுக்கும் இடையை போர் தொடங்கியதில் இருந்தே இந்தியா உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும், போரால் பாதிக்கப்பட்டிருக்கும் உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளையும், அதன் அண்டை நாடுகளுக்கு பொருளாதார ரீதியிலான உதவிகளையும் இந்தியா வழங்கி வருகிறது.

இந்தியாவின் அணுகுமுறை எப்போதும் இராஜதந்திரத்தை ஊக்குவிப்பதாகவே இருக்கும். இதுதான் அமைதியை நோக்கி முன்னோக்கிச் செல்லும் வழியாகும். போர் தொடர்பாக பல சமாதான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு விஷயத்தில் சில சாதகமான அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால், இவை இரு தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. ஆகவே, இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையிலான தீர்வுகளை காண வேண்டும். அதற்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும்” என்று கூறியிருக்கிறார்.

Tags: russiaajit dovalUkraineRussia Ukraine war
ShareTweetSendShare
Previous Post

ஞானவாபி மசூதியில் 3-வது நாளாக தொடரும் தொல்லியல் ஆய்வு!

Next Post

தீவிரவாதிகளுக்கு எதிராக ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படை பதிலடி

Related News

பெற்றோர்களே உஷார் : எல்லை மீறும் ChatGPT- சிறப்பு தொகுப்பு!

ஆற்காடு அருகே கடும் போக்குவரத்து நெரிசல் – அவசர அவசரமாக திறக்கப்பட்ட பாலம்!

திக்…திக்..திக்…சிதிலமடைந்த குடியிருப்புகள்.. திகிலுடன் வாழும் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வரதராஜனுக்கு ஜாமின் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு!

இந்தியாவின் ராஜதந்திரம் : பாகிஸ்தானுக்கு சொல்லும் செய்தி என்ன? சிறப்பு தொகுப்பு!

சொந்த ஊர் செல்ல போதுமான பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அவதி – அதிகாரிகளுடன் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது – நிர்மலா சீதாராமன் பேட்டி!

தீபாவளி பண்டிகை உற்சாகம் – சென்னையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல்  பட்டாசுகளை வாங்க குவிந்த மக்கள்!

உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு – பொதுமக்கள் குளிக்க தடை!

தமிழகத்தில் 1,540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.14, 808 கோடி செலவிடப்படாமல் திரும்ப பெறப்பட்டுள்ளது!

திருவாடானை அருகே லஞ்சம் கேட்டு மிரட்டும் வருவாய் ஆய்வாளர்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் – செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

3 மாத அரிசியை வழங்க மத்திய அரசு உத்தரவு – ஒரு மாத அரிசியை மட்டும் வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு!

கோவை ஜிடி அருங்காட்சியகத்தில் PERFORMANCE CAR பிரிவு திறப்பு!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரம்மோஸ் ஏவுகணை – நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மக்கள் – ஆற்காட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies