ரஷ்யா – உக்ரைன் போர்: நிரந்தர தீர்வு காண இந்தியா தயார் - அஜித் தோவல் உறுதி!
Jun 9, 2025, 12:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரஷ்யா – உக்ரைன் போர்: நிரந்தர தீர்வு காண இந்தியா தயார் – அஜித் தோவல் உறுதி!

Web Desk by Web Desk
Aug 6, 2023, 01:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யா – உக்ரைன் இடையே நடக்கும் போருக்கு நிரந்தரத் தீர்வு காண இந்தியா தயாராக இருக்கிறது. இதைவிட வேறு எதுவும் இந்தியாவுக்கு மகிழ்ச்சியைத் தராது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்திருக்கிறார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்களையும் இணைத்துக் கொள்ள உக்ரைன் முடிவு செய்தது. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா, கடந்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கிறது. போர் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், ஒட்டுமொத்த உலகமும் கடும் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகின்றன. ஆகவே, போரை நிறுத்துவதற்கான முயற்சிகளை உலக நாடுகள் ஒருகிணைந்து மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உக்ரைன் போர் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பான 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டை சவூதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் 40 நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றிருக்கிறார்.

இம்மாநாட்டில் நேற்றைய நிகழ்வின்போது பேசிய அஜித் தோவல், “ரஷ்யா – உக்ரைன் இடையே நடந்துவரும் போருக்கு நிரந்தரத் தீர்வு காண இந்தியா தயாராக இருக்கிறது. இதைவிட இந்தியாவுக்கு வேறு எதுவும் மகிழ்ச்சியையும், திருப்தியையும் அளிக்காது. இரு நாடுகளுக்கும் இடையை போர் தொடங்கியதில் இருந்தே இந்தியா உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும், போரால் பாதிக்கப்பட்டிருக்கும் உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளையும், அதன் அண்டை நாடுகளுக்கு பொருளாதார ரீதியிலான உதவிகளையும் இந்தியா வழங்கி வருகிறது.

இந்தியாவின் அணுகுமுறை எப்போதும் இராஜதந்திரத்தை ஊக்குவிப்பதாகவே இருக்கும். இதுதான் அமைதியை நோக்கி முன்னோக்கிச் செல்லும் வழியாகும். போர் தொடர்பாக பல சமாதான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு விஷயத்தில் சில சாதகமான அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால், இவை இரு தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. ஆகவே, இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையிலான தீர்வுகளை காண வேண்டும். அதற்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும்” என்று கூறியிருக்கிறார்.

Tags: russiaajit dovalUkraineRussia Ukraine war
ShareTweetSendShare
Previous Post

ஞானவாபி மசூதியில் 3-வது நாளாக தொடரும் தொல்லியல் ஆய்வு!

Next Post

தீவிரவாதிகளுக்கு எதிராக ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படை பதிலடி

Related News

பெண்கள் காப்பகத்தில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை!

மகாராஷ்டிராவில் புறநகர் ரயிலில் கூட்ட நெரிசல் – தண்டவாளத்தில் தவறி விழுந்த 5 பேர் உயிரிழப்பு!

ஆர்சிபி அணியின் பாராட்டு விழாவுக்கு அனுமதி வழங்க வேண்டாம் – அரசுக்கு காவல்துறை அதிகாரி எழுதிய கடிதம் அம்பலம்!

பிரதமராக 12-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மோடி – அண்ணாமலை வாழ்த்து!

12-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பிரதமர் மோடி – மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து

பிரஞ்சு ஓபன் டென்னிஸ் : 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் அல்காரஸ்

Load More

அண்மைச் செய்திகள்

இங்கிலாந்தில் பயிற்சியை தொடங்கிய இந்திய அணி!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – கோகோ காப் சாம்பியன்!

வைகாசி விசாக திருவிழா – திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

வைகாசி வளர்பிறை பிரதோஷம் – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம்!

சட்டமன்ற தேர்தலில் நம்பிக்கையுடன் பணியாற்றுங்கள் – மதுரை உயர்மட்ட குழு கூட்டத்தில் அமித்ஷா பேச்சு!

திண்டுக்கல் அருகே கருப்பணசாமி கோயில் வைகாசி திருவிழா தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

கடலூர் அருகே கொள்முதல் நிலையத்தில் மணிகள் முளைத்து வீணாகும் நெல் – அதிகாரிகள் அலட்சியமே காரணம் என விவசாயிகள் வேதனை!

பரமத்தி வேலூர் அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த மூதாட்டி கொலை – போலீஸ் விசாரணை!

வானகரம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை – சரிந்து விழுந்த ராட்சத பேனர்!

மயிலாடுதுறை அருகே அக்னி குண்டத்தில் தவறி விழுந்த பெண் – காப்பாற்றிய இளைஞர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies