ராகுல் காந்தி வழக்கிலிருந்து விடுவிக்கப்படவில்லை: மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்!
Aug 14, 2025, 04:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராகுல் காந்தி வழக்கிலிருந்து விடுவிக்கப்படவில்லை: மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்!

Web Desk by Web Desk
Aug 7, 2023, 06:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறதே தவிர, அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படவில்லை என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியிருக்கிறார்.

மோடி சமூகம் குறித்து அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 15,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து, டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ராகுல் காந்தி, மறுபிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்தார். அதில், தான் குற்றமற்றவன் என்றும், இதற்காக தான் ஒருபோதும் மன்னிப்புக் கேட்க முடியாது என்றும், தனக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பு நிலைக்கத்தக்கதல்ல என்றும் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

மேலும், தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்வதோடு, தன்னை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை கடந்த வெள்ளிக்கிழமை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதையடுத்து, ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் வலியுறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மக்களவை செயலகம், கடந்த 4-ம் தேதி வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், ராகுல் காந்தியின் தகுதி நீக்க அறிவிப்பு திரும்பப் பெறப்படுகிறது. அவர் மீண்டும் வயநாடு தொகுதி எம்.பி.யாக தொடரலாம் என்று அறிவித்தது. இதையடுத்து, 137 நாட்களுக்குப் பிறகு இன்று காலை ராகுல் காந்தி நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தார்.

இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், “ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறதே தவிர, அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படவில்லை. ஆகவே, ராகுல் காந்தி விடுவிக்கப்பட்டதாகக் கருதி கொண்டாடுவது ஜனநாயகத்தை அவமதிப்பது போன்றது மற்றும் துரதிருஷ்டவசமானது” என்று கூறியிருக்கிறார்.

Tags: rahul gandhi latest newsrahul gandhi convicted in 2019 defamation caserahul gandhi disqualified as mprahul gandhi speechPM Modirahul gandhi disqualifiedNarendra Modirahul gandhirahul gandhi convicted in defamation casedefamation case against rahul gandhirahul gandhi convictedrahul gandhi defamation case
ShareTweetSendShare
Previous Post

செந்தில் பாலாஜி கைது சட்ட விரோதம் இல்லை: அமலாக்கத்துறை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Next Post

அடுத்த 2 நாட்களுக்கான வானிலை நிலவரம்.

Related News

சமூக நீதி பற்றி பேச திமுக அரசுக்கு துளியும் அருகதை இல்லை – எல்.முருகன்

ராமநாதபுரம் : பொது வழி பாதை ஆக்கிரமிப்பு – நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்!

கோவை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக-பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

விஜயகாந்த் கட்டிய பாலத்தில் கீழே விழுந்து வணங்கிய பிரேமலதா விஜயகாந்த்!

ஸ்ரீகண்ட் மகாதேவ் மலையில் வெள்ளப்பெருக்கு!

பாகிஸ்தான் – நிலச்சரிவால் 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயக உரிமையைப் பறிப்பது தான் திமுகவின் சமூக நீதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

அல்பேனியா : கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத்தீ!

நடந்து சென்ற வியாபாரி இருவரை கடித்த வெறிநாய்!

மதுரை : நாகம்மாள் கோவில் ஆடி உற்சவ விழா – முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன்!

கர்நாடகா : இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம நபர் – சிசிடிவி காட்சி!

செங்கல்பட்டு : கிடப்பில் போடப்பட்ட நடைபாதை அமைக்கும் பணி- உயிர்சேதம் ஏற்படும் அபாயம்!

சேலம் : கைத்தறி துணிகளில் கைவினைப் பொருட்களை உருவாக்கி அசத்திய மாணவர்கள்!

கோவை : சாலை விபத்தில் ஓய்வு பெற்ற விமானப்படை வீரர் உயிரிழப்பு!

ஈரோடு : கோயில் விழாவையொட்டி களைகட்டிய கால்நடைச் சந்தை!

கூகுள் குரோமை ரூ.3 லட்சம் கோடிக்கு வாங்கத் தயார் : Perplexity நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies