செந்தில் பாலாஜி கைது சட்ட விரோதம் இல்லை: அமலாக்கத்துறை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Jan 14, 2026, 04:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செந்தில் பாலாஜி கைது சட்ட விரோதம் இல்லை: அமலாக்கத்துறை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 7, 2023, 05:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செல்லும் என்றும், கைது செய்யப்பட்டதில் சட்ட விரோதம் இல்லை என்றும், அவரை அமலாக்கத்துறை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது.

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 13-ம் சோதனை நடத்தினர். இதனடிப்படையில், 14-ம் தேதி அதிகாலையில் கைது செய்தனர். இதை எதிர்த்து, செந்தில் பாலாஜி மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று 3-வது நீதிபதியும் தீர்ப்பளித்தார்.

இத்தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜியும், அவரது மனைவி மேகலாவும் தனித்தனியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதேபோல, அமலாக்கத்துறையும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுக்கள் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எல்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பிலும், அமலாக்கத்துறை தரப்பிலும் பலமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “செந்தில் பாலாஜி விசாரணை நடத்த விடாமல் அனைத்து வகைகளிலும் தடுத்தார். இடையூறுகளை ஏற்படுத்தினார். தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாலேயே அவர் கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் உள்ளதால் தற்போது விசாரணைக்கு உட்படுத்த முடியவில்லை.

எனவே, அவர் மருத்துவமனை மற்றும் நீதிமன்ற காவலில் உள்ள இந்த காலகட்டத்தை முதல் 15 நாட்களாக உச்சநீதிமன்றம் எடுத்துக் கொள்ளக் கூடாது. மேலும், தாக்கப்பட்டதாக செந்தில் பாலாஜி கூறியிருக்கும் நிலையில், நீதிபதிகளிடம் காயத்தை காண்பிக்கவில்லை. ஆகவே, செந்தில் பாலாஜியிடம் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்துவது மிக மிக அவசியம்” என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களும் கடந்த 2-ம் தேதி நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழலில், செந்தில் பாலாஜி மேலமுறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் இல்லை என்றும், கைது செல்லும் என்றும் உத்தரவிட்டனர்.

அதோடு, சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு செல்லும் என்றும், கைது செய்யப்பட்ட பிறகு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது என்றும் தீர்ப்பளித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்கவும் அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுக்க அனுமதி கோரி, அமலாக்கத்துறை சார்பில் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி காணொளி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது.

Tags: senthil balaji casesenthil balaji house it raidsenthil balaji latest newssenthil balaji case updatesenthil balaji newssenthil balaji new housesenthil balaji latestsenthil balaji it raiddmk senthil balajiminister senthil balajisenthil balaji dmksenthil balaji arrestSenthil Balajiit raids senthil balaji
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணையில் தொடர்ந்து குறைந்து வரும் நீர்மட்டம்…

Next Post

ராகுல் காந்தி வழக்கிலிருந்து விடுவிக்கப்படவில்லை: மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies