60 சொத்துக்கள் வந்தது எப்படி? செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை!
Jan 14, 2026, 03:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

60 சொத்துக்கள் வந்தது எப்படி? செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 9, 2023, 12:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கிக் கணக்கில் 1.34 கோடி ரூபாய் வந்தது எப்படி? மனைவி மேகலா வங்கிக் கணக்கில் 29.55 லட்சம் வந்தது எப்படி? 60 சொத்துக்கள் வந்தது எப்படி? என செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை, நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு 5 நாட்கள் காவலில் எடுத்திருக்கிறது அமலாக்கத்துறை. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை, கடந்த 7-ம் தேதி இரவு சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். அன்றிரவு 9 மணியளவில் செந்தில் பாலாஜியிடம் விசாரணையைத் தொடங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள் விடிய விடிய விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து நேற்றும் விசாரணை நடந்தது. அப்போது செந்தில் பாலாஜியிடம் காலையில் 3 மணி நேரம், மதியம் 3 மணி நேரம், இரவு 3 மணி நேரம் என 9 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். இந்த விசாரணையின் போது செந்தில் பாலாஜிக்கு அவ்வப்போது மருத்துவர்கள் இரத்த அழுத்த பரிசோதனை செய்தனர்.

விசாரணையின் போது, அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு ‘தனக்குத் தெரியாது’ என்றே செந்தில் பாலாஜி பதிலளித்திருக்கிறார். அதேபோல, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது, அவரது வங்கிக் கணக்குக்குப் பரிமாற்றம் செய்யப்பட்ட 1.34 கோடி ரூபாய் எப்படி வந்தது? என்றும், அவரது மனைவி மேகலா வங்கிக் கணக்கில் 29.55 லட்சம் ரூபாய் எப்படி வந்தது? எனவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். அதற்குத் தங்களது பரம்பரை சொத்தை விற்றுக் கிடைத்தப் பணத்தில், தனது பங்கை அவரது சகோதரர் செலுத்தியதாகத் தெரிவித்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் தீவிர விசுவாசியான திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வீரா.சாமிநாதன் வீட்டில் கைப்பற்றப்பட்ட 60 சொத்து ஆவணங்கள் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இதற்கு அவர் எவ்வித பதிலையும் கூறவில்லை என்று கூறப்படுகிறது. அவர் அலுவலகத்திலேயே தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இதேபோல, வரும் 12-ம் தேதி வரை செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு 5 முறை சம்மன் அனுப்பியும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகவில்லை என்பதால், அவரை கைது செய்ய அமலாக்கத்துறை தீவிர முயற்சி மேற்கொண்டிருக்கிறது.

Tags: dmk senthil balajiMinister senthi balajiED RAIDSenthil Balaji
ShareTweetSendShare
Previous Post

“இந்தியா” பெயரால் எதுவும் நடக்காது: மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ கடும் தாக்கு!

Next Post

பாகிஸ்தான் இரயில் விபத்து: 30 பேர் பலி… 120க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies