60 சொத்துக்கள் வந்தது எப்படி? செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை!
Aug 2, 2026, 03:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

60 சொத்துக்கள் வந்தது எப்படி? செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 9, 2023, 12:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கிக் கணக்கில் 1.34 கோடி ரூபாய் வந்தது எப்படி? மனைவி மேகலா வங்கிக் கணக்கில் 29.55 லட்சம் வந்தது எப்படி? 60 சொத்துக்கள் வந்தது எப்படி? என செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை, நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு 5 நாட்கள் காவலில் எடுத்திருக்கிறது அமலாக்கத்துறை. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை, கடந்த 7-ம் தேதி இரவு சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். அன்றிரவு 9 மணியளவில் செந்தில் பாலாஜியிடம் விசாரணையைத் தொடங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள் விடிய விடிய விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து நேற்றும் விசாரணை நடந்தது. அப்போது செந்தில் பாலாஜியிடம் காலையில் 3 மணி நேரம், மதியம் 3 மணி நேரம், இரவு 3 மணி நேரம் என 9 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். இந்த விசாரணையின் போது செந்தில் பாலாஜிக்கு அவ்வப்போது மருத்துவர்கள் இரத்த அழுத்த பரிசோதனை செய்தனர்.

விசாரணையின் போது, அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு ‘தனக்குத் தெரியாது’ என்றே செந்தில் பாலாஜி பதிலளித்திருக்கிறார். அதேபோல, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது, அவரது வங்கிக் கணக்குக்குப் பரிமாற்றம் செய்யப்பட்ட 1.34 கோடி ரூபாய் எப்படி வந்தது? என்றும், அவரது மனைவி மேகலா வங்கிக் கணக்கில் 29.55 லட்சம் ரூபாய் எப்படி வந்தது? எனவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். அதற்குத் தங்களது பரம்பரை சொத்தை விற்றுக் கிடைத்தப் பணத்தில், தனது பங்கை அவரது சகோதரர் செலுத்தியதாகத் தெரிவித்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் தீவிர விசுவாசியான திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வீரா.சாமிநாதன் வீட்டில் கைப்பற்றப்பட்ட 60 சொத்து ஆவணங்கள் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இதற்கு அவர் எவ்வித பதிலையும் கூறவில்லை என்று கூறப்படுகிறது. அவர் அலுவலகத்திலேயே தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இதேபோல, வரும் 12-ம் தேதி வரை செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு 5 முறை சம்மன் அனுப்பியும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகவில்லை என்பதால், அவரை கைது செய்ய அமலாக்கத்துறை தீவிர முயற்சி மேற்கொண்டிருக்கிறது.

Tags: ED RAIDSenthil Balajidmk senthil balajiMinister senthi balaji
ShareTweetSendShare
Previous Post

“இந்தியா” பெயரால் எதுவும் நடக்காது: மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ கடும் தாக்கு!

Next Post

பாகிஸ்தான் இரயில் விபத்து: 30 பேர் பலி… 120க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Related News

பிரதமர் மோடியின் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

கேரளாவில் தொடரும் மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

கரப்பான்களின் நிதி மற்றும் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் – தகவல் அறியும் உரிமை ஆர்வலர் வலியுறுத்தல்!

கோவை அரபிக் கல்லூரிக்கு வசூலிக்கப்பட்ட நிதி – பயங்கரவாத கருத்துக்களை பரப்ப செலவிட்டது அம்பலம்!

சமூகம் மற்றும் நாட்டின் நலன் மீது அக்கறை கொள்ளும் வகையில் இளைஞர்களை உருவாக்க வேண்டும் – பிரதமர் மோடி

மைசூரில் சுவாமி விவேகானந்தர் கலாசார இளைஞர் மையம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகாவுக்கு வர வேண்டாம் என சிவக்,குமார் கூறுவது தமிழக முதல்வரை அவமதிக்கும் செயல் – நயினார் நாகேந்திரன்

மேகதாது அணைக்கு எதிர்ப்பு – தஞ்சையில் தமிழக பாஜக சார்பில் கண்டன ஆர்பாட்டம்!

நீர்வளத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு விடுவிப்பு – தமிழக அரசு உத்தரவு!

காமன்வெல்த் குத்துச்சண்டையில் 7 தங்கம், 3 வெள்ளி – இந்தியா அபாராம்!

மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தயார் – டி.கே சிவகுமார்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு 2,117 கோடி நிதி – முன்கூட்டியே விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல்!

நிரம்பிய கபினி அணை; 12,000 கன அடி உபரிநீர் திறப்பு

பிரதமர் மோடியின் பதிவு நீக்கப்பட்ட விவகாரம் : META மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு – சிறப்பு கட்டுரை!

வரி மற்றும் போட்டி சலுகை உறுதி அளித்தால் மட்டுமே அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் அமல் : இந்தியா திட்டவட்டம் – சிறப்பு தொகுப்பு!

கல்வி நிலையங்கள் அருகே உள்ள 129 மதுபான கடைகளை மூட வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies