60 சொத்துக்கள் வந்தது எப்படி? செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை!
May 2, 2026, 11:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

60 சொத்துக்கள் வந்தது எப்படி? செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 9, 2023, 12:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கிக் கணக்கில் 1.34 கோடி ரூபாய் வந்தது எப்படி? மனைவி மேகலா வங்கிக் கணக்கில் 29.55 லட்சம் வந்தது எப்படி? 60 சொத்துக்கள் வந்தது எப்படி? என செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை, நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு 5 நாட்கள் காவலில் எடுத்திருக்கிறது அமலாக்கத்துறை. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை, கடந்த 7-ம் தேதி இரவு சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். அன்றிரவு 9 மணியளவில் செந்தில் பாலாஜியிடம் விசாரணையைத் தொடங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள் விடிய விடிய விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து நேற்றும் விசாரணை நடந்தது. அப்போது செந்தில் பாலாஜியிடம் காலையில் 3 மணி நேரம், மதியம் 3 மணி நேரம், இரவு 3 மணி நேரம் என 9 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். இந்த விசாரணையின் போது செந்தில் பாலாஜிக்கு அவ்வப்போது மருத்துவர்கள் இரத்த அழுத்த பரிசோதனை செய்தனர்.

விசாரணையின் போது, அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு ‘தனக்குத் தெரியாது’ என்றே செந்தில் பாலாஜி பதிலளித்திருக்கிறார். அதேபோல, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது, அவரது வங்கிக் கணக்குக்குப் பரிமாற்றம் செய்யப்பட்ட 1.34 கோடி ரூபாய் எப்படி வந்தது? என்றும், அவரது மனைவி மேகலா வங்கிக் கணக்கில் 29.55 லட்சம் ரூபாய் எப்படி வந்தது? எனவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். அதற்குத் தங்களது பரம்பரை சொத்தை விற்றுக் கிடைத்தப் பணத்தில், தனது பங்கை அவரது சகோதரர் செலுத்தியதாகத் தெரிவித்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் தீவிர விசுவாசியான திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வீரா.சாமிநாதன் வீட்டில் கைப்பற்றப்பட்ட 60 சொத்து ஆவணங்கள் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இதற்கு அவர் எவ்வித பதிலையும் கூறவில்லை என்று கூறப்படுகிறது. அவர் அலுவலகத்திலேயே தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இதேபோல, வரும் 12-ம் தேதி வரை செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு 5 முறை சம்மன் அனுப்பியும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகவில்லை என்பதால், அவரை கைது செய்ய அமலாக்கத்துறை தீவிர முயற்சி மேற்கொண்டிருக்கிறது.

Tags: ED RAIDSenthil Balajidmk senthil balajiMinister senthi balaji
ShareTweetSendShare
Previous Post

“இந்தியா” பெயரால் எதுவும் நடக்காது: மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ கடும் தாக்கு!

Next Post

பாகிஸ்தான் இரயில் விபத்து: 30 பேர் பலி… 120க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Related News

மத்தியப்பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 9 பேர் பலி!

இன்றைய தங்கம் விலை!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் – சீனா

மேலூர் பகுதியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மேற்கு வங்க மாநில 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!

எல்லைப் பகுதிகள் தன்னிறைவு அடைய வேண்டும் – மத்திய அமைச்சர் அமித் ஷா விருப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் உலா கோலாகலம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்கு – தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

PF குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7, 500 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டம்!

விரைவில் தோனி களமிறங்குவார் – மைக் ஹசி தகவல்!

மே 4 -ம் தேதி மக்கனின் உண்மையான கணிப்பு தெரியும் – நயினார் நாகேந்திரன்

ஏப்ரல் மாதத்தில் நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.2,43,000 கோடியாக உயர்வு!

அனைவரும் ஒன்று என்ற உணர்வுடன் வளர வேண்டும்; ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பேச்சு

PF பென்ஷன் ரூ. 7,500 ஆக உயருகிறதா ? விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

10 ஆண்டுகள் நிறைவு செய்த யுபிஐ – நடப்பு நிதியாண்டில் 314 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனை!

தேனி, பழனி, ஆண்டிப்பட்டியில் வெளுத்து வாங்கிய மழை – பழனி கோவில் படிக்கட்டுகளில் அருவி போல் ஓடிய வெள்ளம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies