ஏப்ரல் மாதத்தில் நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் 2 லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி வசூல் 2 லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாய் என்றும், இது முந்தைய ஆண்டு ஏப்ரல் மாதம் வசூலான தொகையைவிட எட்டு புள்ளி ஏழு சதவீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மொத்த வருமானம் நான்கு புள்ளி மூன்று சதவீதம் அதிகரித்து, ஒன்று புள்ளி எட்டு ஐந்து லட்சம் கோடியாகவும் உள்ளது. இறக்குமதி மூலம் கிடைக்கும் வருமானம் 25 புள்ளி எட்டு சதவீதம் அதிகரித்து, 57 ஆயிரத்து 580 கோடியாகவும் உள்ளது.
ஜிஎஸ்டி வரி வருவாயில் இருந்து தமிழகத்தின் பங்காக 8 ஆயிரத்து 413 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டை காட்டிலும் 46 சதவீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















