தென்னிந்தியாவில் சிலர் பிரிவினையைத் தூண்ட முயற்சிப்பதாக, தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் தெரிவித்தார். அரசியல் மற்றும் சட்டப்பூர்வமாக குஜராத், மகாராஷ்டிர மாநிலங்கள் உருவான தினம், சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் கொண்டாடப்பட்டது. இதில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் கலந்து கொண்டு, இரு மாநிலங்களை சேர்ந்தவர்களை கௌரவித்தார். பின்னர் பேசிய அவர், தென்னிந்தியாவில் சிலர் பிரிவினையைத் தூண்ட முயல்வதாகவும், அதைத் தாண்டி நாம் அனைவரும் ஒன்று என்ற உணர்வுடன் வளர வேண்டும் என்று குறிப்பிட்டார். வளர்ச்சி என்பது வெறும் பொருளாதாரம் மட்டுமல்ல, கல்வி, சமூகம், மொழி, கலாச்சாரம் என அனைத்தும் முன்னேற வேண்டும் என்றும் தெரிவித்தார். வளர்ச்சியடைந்த பாரதம் என்பது வளர்ச்சியடைந்த தமிழ்நாடு வழியாகவே சாத்தியமாகும் என்றும், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் தெரிவித்தார்.
















