தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் PF பென்ஷன் குறைந்தபட்ச தொகை ஆயிரம் ரூபாயாக உள்ளது. தற்போதைய தொகை அடிப்படை வாழ்வாதாரத்திற்கு போதுமானதல்ல என்றும், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும், தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வூதியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. இதன்பேரில் ஓய்வூதியத்தை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், நாடாளுமன்ற குழுவின் ஆதரவும் இந்த முன்மொழிவுக்கு கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரைவில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
















