பத்தாண்டுகளை நிறைவு செய்துள்ள யுபிஐ பணப்பரிவர்த்தனை, நடப்பு நிதியாண்டில் மட்டும் 314 லட்சம் கோடியைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.
யுபிஐ அறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அது இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார தூணாக விளங்குகிறது.
நடப்பு நிதியாண்டில் மட்டும் யுபிஐ பரிவர்த்தனை 314 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 700க்கும் மேற்பட்ட வங்கிகள் யுபிஐ வசதிகளை பயன்படுத்துவதால் பணப்பரிவர்த்தனைகளில் கிட்டத்தட்ட 49 சதவீதம் யுபிஐ வாயிலாக தான் நடக்கிறது.
உலகின் மிகப்பெரிய மற்றும் விரைவான பணம் செலுத்தும் முறையாக, யுபிஐ-யை ஐஎம்எப் அங்கீகரித்துள்ளது.
















