கருத்துக்கணிப்பு முறையாக இருந்தால் அதன் மீது நம்பிக்கை இருக்கும், ஆனால் பல நேரங்களில் கருத்து திணிப்பாகத் தான் உள்ளது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் நடைபெற சித்ரா பௌர்ணமி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது, மே 4 -ம் தேதி மக்களுடைய உண்மையான கருத்து கணிப்பு தெரியும் என தெரிவித்தார்.
திமுக ஆட்சியை மாற்ற வேண்டும் என அனைவரும் நினைக்கின்றனர் என்றும் அவர் கூறினார். விஜய் தலைமையிலான தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றும் நயினார் குறிப்பிட்டார்.
















