எல்லைப் பகுதி தன்னிறைவு அடைய விரும்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கார்கிலில், பால் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய அமித்ஷா, எல்லைப் பகுதி தன்னிறைவு அடைய வேண்டும் என தாங்கள் விரும்புவதாக தெரிவித்தார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், துவாரகா முதல் காமாக்யா வரையிலும் உள்ள பாரத் சாரணர்களின் வரலாறு பற்றி நாடு முழுவதும் தெரியும் என்றும் குறிப்பிட்டார்.
லடாக் மக்களின் தேசபக்தி, நாட்டின் பாதுகாப்பிற்கான அவர்களது அர்ப்பணிப்பு, உறுதிப்பாட்டை ஒவ்வொரு குடிமகனும் போற்றிப் பாராட்டுவதாகவும் அமித்ஷா தெரிவித்தார்.
















