மேற்குவங்க மாநிலத்தில் 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மேற்குவங்க மாநிலத்தில் கடந்த மாதம் 23-ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும், 29ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடந்து முடிந்தது. இதில் மாக்ரஹாட் பாச்சிம், டைமண்ட் ஹார்பர் ஆகிய தொகுதிகளில் வன்முறை ஏற்பட்டது. மேலும், அங்கு முறைகேடுகள் நடந்ததாகவும் புகார்கள் எழுந்தன.
இதனைத்தொடர்ந்து மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, முர்ஷிதாபாத், மால்டா, வடக்கு 24 பாரகன் ஆகிய மாவட்டங்களில் உள்ள 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த மறுவாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
















