மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது.
மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் கோடை வெப்பம் கொளுத்திய நிலையில் மாலை நேரத்தில் திடீரென வானிலை மாற்றம் ஏற்பட்டது.
கருமேகங்கள் சூழ்ந்து சில இடங்களில் மழை பெய்தது.
மேலூர் அருகே சருகுவலையபட்டி , கீழையூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்த நிலையில் அங்கு திடீரென ஆலங்கட்டி பொழிந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
















