செந்தில் பாலாஜி தம்பி வீட்டில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை!
Jan 14, 2026, 04:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செந்தில் பாலாஜி தம்பி வீட்டில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை!

அசோக் குமார் மனைவிக்கும் அமலாக்கத்துறை சம்மன்.

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 9, 2023, 05:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று மீண்டும் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், அவரது மனைவிக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், அவரது தம்பி அசோக்குமாருக்கும் அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், இருவருமே விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து, கடந்த மாதம் 13-ம் தேதி செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமார் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, மறுநாள் (14-ம் தேதி) அதிகாலை அமலாக்கத்துறையினரால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். பின்னர், நெஞ்சுவலி, அறுவைச் சிகிச்சை என சம்பவங்கள் அரங்கேறி முடிந்து, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது, நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை 5 நாட்கள் காவலில் எடுத்து சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமாருக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5-க்கும் மேற்பட்ட முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், உடல் நிலையை காரணம் காட்டி இதுவரை அசோக் குமார் ஆஜராகாமல் இருந்தார். இந்தச் சூழலில், கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராம்நகர் பகுதியில் அசோக் குமார் புதிதாக பிரம்மாண்ட வீடு ஒன்றைக் கட்டி வருகிறார். இந்த வீட்டிற்குத் தேவையான கிரானைட்  கற்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன எனவும், இவை மிகவும் விலை உயர்ந்தது எனவும் தகவல்கள் பரவின.

மேற்கண்ட வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கெனவே சோதனை நடத்திய நிலையில், அதே வீட்டில் இன்று மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

கரூர் செங்குந்தபுரத்திலுள்ள செந்தில் பாலாஜியின் நண்பரும் ஆடிட்டருமான சதீஷ்குமார் அலுவலகத்திலும் சோதனை நடந்து வருகிறது . இது தவிர, புதிய வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், அசோக் குமார் மனைவி நிர்மலாவின் பெயரைக் குறிப்பிட்டு, நேரில் ஆஜராக , புதிய வீட்டில் சம்மனை ஒட்டியிருக்கிறார்கள்.அசோக் குமார் புதிதாக வீடு கட்டி வரும் மேற்கண்ட இடம், அவரது மனைவி நிர்மலா பெயரில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அந்த இடம் 25 கோடி ரூபாய் மதிப்புடையது என்றும் , அதை 10.85 லட்சம் ரூபாய்க்கு நிர்மலா பெயரில் பத்திரம் பதிவு செய்திருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில் . இதுகுறித்தும் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.

அடுத்து,அவரது தம்பி அசோக் குமார் கட்டி வரும் புதிய வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி இருப்பதும், அவரது மனைவிக்கு சம்மன் அனுப்பி இருப்பதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: Senthil Balajikarursenthil balaji new houseSenthil balaji BrotherSenthil balaji brother Ashokkumar
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் 76-வது சுதந்திர தின விழாவில் பங்கேற்கும் அமெரிக்க எம்.பி.க்கள்…

Next Post

இந்தியாவை வழிநடத்தும் தகுதி ராகுலுக்கு இருக்கிறதா? ரவிசங்கர் பிரசாத் எம்.பி. அதிரடி கேள்வி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies