ஜம்மு காஷ்மீரில் 6 தீவிரவாதிகள் கைது: கையெறி குண்டுகள், சீன துப்பாக்கி பறிமுதல்!
Jan 14, 2026, 06:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 6 தீவிரவாதிகள் கைது: கையெறி குண்டுகள், சீன துப்பாக்கி பறிமுதல்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 10, 2023, 02:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மற்றும் புத்காம் மாவட்டங்களில் பதுங்கி இருந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 6 பேரைப் பாதுகாப்புப் படையினரும், மாநில காவல்துறையினரும் கைது செய்திருக்கின்றனர்.

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கும், மாநில காவல்துறையினருக்கும் இரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இரு பிரிவினரும் பாரமுல்லா மாவட்டம் முழுவதும் சல்லடை போட்டு தேடினர். அப்போது, உரியின் சுருண்டா பகுதியைச் சேர்ந்த ஷோகத் அலி அவான் என்பவனை கைது செய்தனர். இவன் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்தவன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும், மாநில காவல்துறையினரும் அவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவன் கொடுத்த தகவலின் பேரில், அகமது டின் மற்றும் முகமது சதீக் கட்டனா ஆகிய இருவரையும் கைது செய்தனர். இம்மூவரிடம் இருந்தும் 2 கையெறி குண்டுகள், ஒரு சீன துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி, 4 துப்பாக்கி குண்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர்கள் மூவரும் பாகிஸ்தானைத்  தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

மேலும், இவர்கள் மூவரும் பாகிஸ்தானிலுள்ள லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பெற்று, இந்தியாவுக்கு கடத்தி வந்து, இங்குள்ள தீவிரவாதிகளுக்கு விநியோகம் செய்து வந்திருக்கிறார்கள். இவ்வாறு, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டதோடு, நிதியுதவி திரட்டி தீவிரவாதிகளுக்கு வழங்கி வந்ததும் தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து மாநில காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல, மத்திய காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் நடத்திய தேடுதல் வேட்டையில் மேலும் 3 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கான்சாஹாப் பகுதியில் பாதுகாப்புப் படையினரும், மாநில காவல்துறையினரும் நடத்திய சோதனையில் கிரெம்ஷோரா பகுதியைச் சேர்ந்த கைசர் அகமது தர், தாஹிர் அகமது தர், வாகர் பகுதியைச் சேர்ந்த அகிப் ரஷீத் கனி ஆகிய 3 தீவிரவாதிகளையம் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இவர்களிடம் இருந்து சீன கையெறி குண்டுகள், துப்பாக்கி, 57 தோட்டாக்கள் ஆகியவை மீட்கப்பட்டிருக்கின்றன. இது குறித்தும் மாநிலக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags: IndiaMuslimkashmirjammu kashmir encounterTerrarist
ShareTweetSendShare
Previous Post

தாம்பரம் நெல்லை இடையே சிறப்பு இரயில்கள்; தென்னக இரயில்வே அறிவிப்பு!

Next Post

நிலக்கரி பயன்பாடுஅதிகரிப்பு- மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies