ஜம்மு காஷ்மீரில் 6 தீவிரவாதிகள் கைது: கையெறி குண்டுகள், சீன துப்பாக்கி பறிமுதல்!
Apr 28, 2026, 01:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 6 தீவிரவாதிகள் கைது: கையெறி குண்டுகள், சீன துப்பாக்கி பறிமுதல்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 10, 2023, 02:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மற்றும் புத்காம் மாவட்டங்களில் பதுங்கி இருந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 6 பேரைப் பாதுகாப்புப் படையினரும், மாநில காவல்துறையினரும் கைது செய்திருக்கின்றனர்.

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கும், மாநில காவல்துறையினருக்கும் இரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இரு பிரிவினரும் பாரமுல்லா மாவட்டம் முழுவதும் சல்லடை போட்டு தேடினர். அப்போது, உரியின் சுருண்டா பகுதியைச் சேர்ந்த ஷோகத் அலி அவான் என்பவனை கைது செய்தனர். இவன் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்தவன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும், மாநில காவல்துறையினரும் அவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவன் கொடுத்த தகவலின் பேரில், அகமது டின் மற்றும் முகமது சதீக் கட்டனா ஆகிய இருவரையும் கைது செய்தனர். இம்மூவரிடம் இருந்தும் 2 கையெறி குண்டுகள், ஒரு சீன துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி, 4 துப்பாக்கி குண்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர்கள் மூவரும் பாகிஸ்தானைத்  தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

மேலும், இவர்கள் மூவரும் பாகிஸ்தானிலுள்ள லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பெற்று, இந்தியாவுக்கு கடத்தி வந்து, இங்குள்ள தீவிரவாதிகளுக்கு விநியோகம் செய்து வந்திருக்கிறார்கள். இவ்வாறு, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டதோடு, நிதியுதவி திரட்டி தீவிரவாதிகளுக்கு வழங்கி வந்ததும் தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து மாநில காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல, மத்திய காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் நடத்திய தேடுதல் வேட்டையில் மேலும் 3 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கான்சாஹாப் பகுதியில் பாதுகாப்புப் படையினரும், மாநில காவல்துறையினரும் நடத்திய சோதனையில் கிரெம்ஷோரா பகுதியைச் சேர்ந்த கைசர் அகமது தர், தாஹிர் அகமது தர், வாகர் பகுதியைச் சேர்ந்த அகிப் ரஷீத் கனி ஆகிய 3 தீவிரவாதிகளையம் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இவர்களிடம் இருந்து சீன கையெறி குண்டுகள், துப்பாக்கி, 57 தோட்டாக்கள் ஆகியவை மீட்கப்பட்டிருக்கின்றன. இது குறித்தும் மாநிலக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags: IndiaMuslimkashmirjammu kashmir encounterTerrarist
ShareTweetSendShare
Previous Post

தாம்பரம் நெல்லை இடையே சிறப்பு இரயில்கள்; தென்னக இரயில்வே அறிவிப்பு!

Next Post

நிலக்கரி பயன்பாடுஅதிகரிப்பு- மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

Related News

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்தோம் – மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண சென்ற பக்தர்கள் குற்றச்சாட்டு!

கோடை வெயில் எதிரொலி – டெல்லியில் பள்ளிகள் நேரம் மாற்றம்!

மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸில் இணைந்தது தான் ஆபத்தான விஷயம் – ராகுலின் கேள்விக்கு மாணவி கொடுத்த பதில்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விஜய் – வேலுடன் விஸ்வரூப தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் தரிசனம்!

முருகன் சிலையை நிறுவ அனுமதி மறுத்து மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவு ரத்து – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

ஸ்ரீகள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா தொடக்கம்!

மதுரை சித்திரை திருவிழா – மீனாட்சியம்மனின் ‘திக் விஜயம்’ கோலாகலம்!

இந்திய பொருட்களுக்கு பூஜ்யம் வரி; இந்தியா, நியூசி., வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியர்கள் நாடு திரும்புங்கள்;ஸ்ரீதர் வேம்பு வேண்டுகோள்

தரமற்ற கேன் குடிநீர் விற்றால் ரூ.5,000 அபராதம்; சுகாதாரத்துறை எச்சரிக்கை

இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; நியூசி. பிரதமர் பெருமிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies