ஜம்மு காஷ்மீரில் 6 தீவிரவாதிகள் கைது: கையெறி குண்டுகள், சீன துப்பாக்கி பறிமுதல்!
Sep 12, 2026, 02:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 6 தீவிரவாதிகள் கைது: கையெறி குண்டுகள், சீன துப்பாக்கி பறிமுதல்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 10, 2023, 02:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மற்றும் புத்காம் மாவட்டங்களில் பதுங்கி இருந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 6 பேரைப் பாதுகாப்புப் படையினரும், மாநில காவல்துறையினரும் கைது செய்திருக்கின்றனர்.

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கும், மாநில காவல்துறையினருக்கும் இரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இரு பிரிவினரும் பாரமுல்லா மாவட்டம் முழுவதும் சல்லடை போட்டு தேடினர். அப்போது, உரியின் சுருண்டா பகுதியைச் சேர்ந்த ஷோகத் அலி அவான் என்பவனை கைது செய்தனர். இவன் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்தவன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும், மாநில காவல்துறையினரும் அவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவன் கொடுத்த தகவலின் பேரில், அகமது டின் மற்றும் முகமது சதீக் கட்டனா ஆகிய இருவரையும் கைது செய்தனர். இம்மூவரிடம் இருந்தும் 2 கையெறி குண்டுகள், ஒரு சீன துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி, 4 துப்பாக்கி குண்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர்கள் மூவரும் பாகிஸ்தானைத்  தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

மேலும், இவர்கள் மூவரும் பாகிஸ்தானிலுள்ள லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பெற்று, இந்தியாவுக்கு கடத்தி வந்து, இங்குள்ள தீவிரவாதிகளுக்கு விநியோகம் செய்து வந்திருக்கிறார்கள். இவ்வாறு, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டதோடு, நிதியுதவி திரட்டி தீவிரவாதிகளுக்கு வழங்கி வந்ததும் தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து மாநில காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல, மத்திய காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் நடத்திய தேடுதல் வேட்டையில் மேலும் 3 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கான்சாஹாப் பகுதியில் பாதுகாப்புப் படையினரும், மாநில காவல்துறையினரும் நடத்திய சோதனையில் கிரெம்ஷோரா பகுதியைச் சேர்ந்த கைசர் அகமது தர், தாஹிர் அகமது தர், வாகர் பகுதியைச் சேர்ந்த அகிப் ரஷீத் கனி ஆகிய 3 தீவிரவாதிகளையம் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இவர்களிடம் இருந்து சீன கையெறி குண்டுகள், துப்பாக்கி, 57 தோட்டாக்கள் ஆகியவை மீட்கப்பட்டிருக்கின்றன. இது குறித்தும் மாநிலக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags: IndiaMuslimkashmirjammu kashmir encounterTerrarist
Share
Tweet
SendShare
Previous Post

தாம்பரம் நெல்லை இடையே சிறப்பு இரயில்கள்; தென்னக இரயில்வே அறிவிப்பு!

Next Post

நிலக்கரி பயன்பாடுஅதிகரிப்பு- மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies