12 ஆண்டுகள்-12 முக்கிய முடிவுகள் : இந்தியாவை விஸ்வ குருவாக்கிய பிரதமர் மோடி - சிறப்பு கட்டுரை!
Jun 11, 2026, 07:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

12 ஆண்டுகள்-12 முக்கிய முடிவுகள் : இந்தியாவை விஸ்வ குருவாக்கிய பிரதமர் மோடி – சிறப்பு கட்டுரை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 11, 2026, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா வெறும் வளர்ச்சியைப் பற்றி மட்டும் பேசவில்லை. கடந்த 12 ஆண்டுகளில், பல அதிரடி கொள்கை மாற்ற முடிவுகளைப் பிரதமர் மோடி நடைமுறைக்குக் கொண்டுவந்து தேசத்தை முன்னேற்றி வருகிறார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 4,398 நாட்கள் என்ற சாதனையைப் பிரதமர் மோடி முறியடித்துள்ளார்.

தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமரான பிரதமர் மோடி, அப்பதவியில் 4,399 நாட்கள் தொடர்ந்து நீண்ட காலம் பதவி வகித்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

2014-ல் முதல்முறையாக பிரதமரான மோடியின் முதல் ஆட்சிக்காலத்தில் இந்தியாவை பொருளாதார சூப்பர் பவராக்குவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. 2019-ல் பிரதமர் மோடியின் இரண்டாவது ஆட்சிகாலத்தில் அனைவரையும் உள்ளட்டக்கிய கொள்கையுடன் காஷ்மீருக்கான 370வது சட்டப் பிரிவு நீக்கம் எனப் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க சீர்த்திருத்தங்கள் கொண்டு வரப் பட்டன.

2024-ல் தொடங்கிய பிரதமர் மோடியின் மூன்றாவது ஆட்சியில் 2047-ல் வளர்ந்த பாரதம் என்று குறிக்கோளுடன் செயல் திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக கடந்த 12 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையில் 12 முக்கிய கொள்கை முடிவுகள் நாட்டின் தலையெழுத்தையே மாற்றி இருக்கின்றன.

2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி மாலை, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று துணிச்சலாக பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார் பிரதமர் மோடி. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை நோக்கி நாடு வேகமாக நகர்வதற்கு இந்த முடிவே அடித்தளத்தை அமைத்தது.

2016-ல் பிரதமர் மோடி வளர்த்தெடுத்த நாட்டின் ஸ்டார்ட்அப் சூழலமைப்பு உலகின் மிகப்பெரிய ஸ்டார்ட்அப் சூழலமைப்புகளில் முதன்மையாக திகழ்கிறது.

2017-ஆம் ஆண்டு ஜூலையில் கொண்டுவரப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி என்ற GST வரி சட்டம், நாட்டில் தேசிய சந்தையை உருவாக்கியது.

2018-ல் பிரதமர் மோடியின் அரசு கொண்டுவந்த ஆயுஷ்மான் பாரத் திட்டம் உலகின் மிகப்பெரிய பொது சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இது குறைந்த வருமானம் கொண்ட லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு சுகாதார சேவைகளைத் தருகிறது.

மேக் இன் இந்தியா மற்றும் ஆத்மநிர்பர் பாரத் போன்ற திட்டங்கள் உற்பத்தி மற்றும் தன்னிறைவு என நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றன.

மேலும் பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில், பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த சீர்திருத்தமான,மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்குகிறது.

2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 சட்டப் பிரிவை பிரதமர் மோடியின் அரசு ரத்து செய்தது. இது ஜம்மு-காஷ்மீரை இந்தியாவின் பிற பகுதிகளுடன் முழுமையாக ஒருங்கிணைத்தது.

2019-ல், முத்தலாக்கைக் குற்றமாக்கும் சட்டத்தைப் பிரதமர் மோடி கொண்டுவந்தார். இது முஸ்லிம் பெண்களுக்கு தன்னிச்சையான விவாகரத்து நடைமுறைகளுக்கு எதிராக சட்டப் பாதுகாப்பை வழங்கியுள்ளது.

2016-ல் நடந்த உரி பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அப்பால் இருந்த பயங்கரவாதத் தளங்கள் மீது இந்தியா surgical strikes செய்தது. 2019-ல் புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, பாலகோட்டில் இருந்த பயங்கரவாதக் கட்டமைப்புகள் மீது அதிரடி தாக்குதல்கள் நடத்தப்பட்டது. 2025-ல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக நடத்தப்பட்ட ஆப்ரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ரத்தமும், தண்ணீரும் ஒன்றாக பாயாது என்று நிலைப்பாட்டை உறுதியாக பிரதமர் மோடி எடுத்தார்.

2016-ல் அறிமுகப்படுத்தப்பட்ட UPI, இன்று இந்தியாவின் சில்லறை வர்த்தகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக வளர்ந்துள்ளது. 2025-26 நிதியாண்டிற்குள், இது 200 பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளைக் கையாண்டுள்ளது.

குறிப்பாக ஜன் தன்-ஆதார்-மொபைல் கட்டமைப்பு, அரசின் நலத்திட்ட உதவிகள் இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக மக்களைச் சென்றடையும் புதிய நெறிமுறையாக அமைந்தது.

எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக 2019-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, 2024-ஆம் ஆண்டு ஜனவரியில் அயோத்தி இராமர் கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 12 ஆண்டுகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் உலகிற்குத் தலைமை தாங்குவது முதல், முக்கிய உற்பத்தி மையமாக திகழ்வது வரை, அனைத்து துறைகளிலும் புதிய அளவுகோல்களை அமைத்து, விஷ்வ குருவாக நிமிர்ந்து நிற்கிறது.

Tags: 398 days in officeModiprime minister modiViksit Bharat"Modi has surpassed the record of 4
ShareTweetSendShare
Previous Post

புதிய கருத்துக் கணிப்பில் அதிர்ச்சி தகவல் – அமெரிக்கர்களிடம் செல்வாக்கு இழந்த ட்ரம்ப் – சிறப்பு தொகுப்பு!

Related News

புதிய கருத்துக் கணிப்பில் அதிர்ச்சி தகவல் – அமெரிக்கர்களிடம் செல்வாக்கு இழந்த ட்ரம்ப் – சிறப்பு தொகுப்பு!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – மீண்டும் சிபிஐ விசாரணை தொடக்கம்!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் ஒரு எம்.பி ராஜினாமா!

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் – முதல்வர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்பு!

சட்டசபையில் எப்படி பேசுவது? : சிறப்பு பயிற்சி மேற்கொண்டு வரும் உதயநிதி!

கருகும் நிலையில் நெற்பயிர்கள்! கருணை காட்டுமா தவெக அரசு? நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

12 ஆண்டுகள்-12 முக்கிய முடிவுகள் : இந்தியாவை விஸ்வ குருவாக்கிய பிரதமர் மோடி – சிறப்பு கட்டுரை!

இயக்குநர் பாரதிராஜா மறைவு மிகுந்த துயரம் அளிக்கிறது – பிரதமர் மோடி

குடியரசு தலைவருடன் தமிழக முதல்வர் சந்திப்பு – குடியரசு துணைத்தலைவர் சிபிஆரையும் சந்தித்தார் ஜோசப் விஜய்!

சட்டப்பேரவை கூட்டம் – ஆளுநரை சந்தித்து அழைப்பு விடுத்தார் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்!

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்11-வது கவுன்சில் கூட்டம் – முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறார்!

பயணிகள் விமானங்கள் இந்தியா தயாரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை – பிரதமர் மோடி உறுதி!

டெல்லியில் நடைபெற்ற என்டிஏ கூட்டம் – அதிக நாட்கள் பிரதமர் என்ற சாதனை படைத்த மோடிக்கு பாராட்டு!

தமிழ் ஜனம் உள்ளிட்ட செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா? – எல்.முருகன் கண்டனம்!

நமது சிந்தனையை சிதறடிக்க பல்வேறு முயற்சிகள் நடைபெறுகிறது – காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார்

இந்தியாவின் நீண்டகால பிரதமர் சாதனை – மோடிக்கு எல்.முருகன் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies