சென்னை ராமாபுரத்தில் மின்வெட்டால் அவதிக்குள்ளான மக்கள் சாலையில் திரண்டு தவெக அரசுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
ராமாபுரத்தில் உள்ள ஆண்டாள் நகர் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்த பிரச்னை நீடித்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் அவதிக்குள்ளான மக்கள் சாலையில் திரண்டு தவெக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 20 முதல் 30 ஆண்டுகள் பழமையான மின் உட்கட்டமைப்பை மாற்றாததே பிரச்சனைக்குக் காரணம் என குற்றம்சாட்டிய மக்கள், தினமும் நள்ளிரவில் 3 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்படுவதால் கடும் அவதியடைந்து வருவதாக தெரிவித்தனர்.
குறைந்த மின் அழுத்தத்தால் மின்சாதனப் பொருட்கள் சேதமடைவதாக கூறிய மக்கள், புதிய மின்மாற்றி அமைத்து சீரான மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கவும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
















