மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில், டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வதற்கான மாற்றுத் திட்டங்களை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றும்,
மத்திய அரசிடம் நிதி உதவி பெற்று உழவர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்யலாமா? என்பது குறித்து ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும்,
ஐந்தாயிரம் ரூபாய் இடுபொருள் மானியத்துடன் குறுவை தொகுப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் எனவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
















