சென்னையில், ஆறு மாதம் சம்பளம் தரவில்லை எனக்கூறி சரவணபவன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வடபழனி முருகன் கோயில் முன்பு கையில் தங்களது சம்பள ரசீதுகளை ஏந்தியபடி, சரவணபவன் உணவக ஊழியர்கள் திரண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஊழியர்கள், கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், 10 முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய தங்களுக்கு உரிய ஊதியம் கிடைக்காமல் பெரும் சிரமம் அடைந்துள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
அதோடு, தொழிலாளர் வைப்பு நிதி உள்ளிட்ட சட்டப்பூர்வ நலன்களும் வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ள ஊழியர்கள், சரியான நீதி கிடைக்காவிட்டால் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக கூறியுள்ளனர்.
அங்கும் நீதி கிடைக்கவில்லை என்றால் தலைமைச் செயலகத்திற்கு சென்று முறையிடுவோம் தெரிவித்துள்ளனர்.
















