பாகிஸ்தான், சீன எல்லையில் பதட்டம் ? ஸ்ரீநகரில் மிக்-29 போர் விமானங்கள் நிலை நிறுத்தம்!
Aug 17, 2025, 04:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தான், சீன எல்லையில் பதட்டம் ? ஸ்ரீநகரில் மிக்-29 போர் விமானங்கள் நிலை நிறுத்தம்!

Web Desk by Web Desk
Aug 12, 2023, 12:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் மற்றும் சீனா எல்லையில் எவ்வித சவால்களையும் சமாளிக்கும் வகையில், ஸ்ரீநகரில் மிக்-29 போர் விமானங்களை இந்தியா நிலை நிறுத்தி இருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகள் எப்போதும் பதற்றம் நிறைந்ததாகவே இருக்கின்றன. கார்கில் உட்பட சில இடங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அத்துமீறிய பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்திருக்கிறது. அதேபோல, கடந்த 2020-ம் ஆண்டு லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறிய சீனாவுக்கும், இந்தியா பதிலடி கொடுத்தது.

இதையடுத்து, பாகிஸ்தான் மற்றும் சீன எல்லையில், மேம்படுத்தப்பட்ட இராணுவ தளவாடங்களை இந்தியா நிலைநிறுத்தி வருகிறது. மேலும், தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில், சுரங்கப் பாதைகளையும் இந்தியா அமைத்து வருகிறது. குறிப்பாக, கார்கில் சம்பவத்துக்குப் பிறகு பாகிஸ்தான் எல்லையில் மிக்-21 ரக போர்விமானங்களையும், கல்வான் சம்பவத்திற்குப் பிறகு, லடாக் எல்லையில் மிக்-29 ரக போர் விமானங்களை இந்தியா நிலை நிறுத்தியது.

இந்த நிலையில், திடீரென ஸ்ரீநகரிலும் மிக்-29 ரக போர் விமானங்களை இந்தியா நிலை நிறுத்தி இருக்கிறது. இதனால், பாகிஸ்தான் மற்றும் சீன எல்லையில் பதற்றம் நிலவுகிறதா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. பால்கோட் தாக்குதலின்போது பாகிஸ்தானின் எஃப்-16 ரக போர் விமானத்தை, தாக்கி அழித்த மிக்-21 ரக போர் விமானத்தை விட, அதிக திறன் கொண்டது மிக்-29 ரக போர் விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து விமானப் படைப் பிரிவுத் தலைவர் விபுல் சர்மா கூறுகையில், “காஷ்மீர் பள்ளத்தாக்கின் மையப்பகுதியாக ஸ்ரீநகர் விளங்குகிறது. மேலும், தரைமட்டத்தில் இருந்து மிகவும் உயரமான பகுதியில் அமைந்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, அதிக எடை, உந்துதல் திறன், எதிரிகளின் ஊடுருவலுக்கு குறைந்த நேரத்தில் பதிலடி கொடுப்பது போன்ற மூலோபாய ரீதியாக மிக்-29 ரக போர் விமானம் மிகவும் சிறந்தது. ஆகவே, மிக்-29 ரக போர் விமானம் ஸ்ரீநகரில் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

நைஜர் நாட்டில் இராணுவ புரட்சி: இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்!

Next Post

ட்விட்டர் பதிவில், அண்ணாமலை இன்று

Related News

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

The Bengal Files படத்தின் ட்ரெய்லரை திரையிட விடாமல் தடுத்த விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

இந்தியா மீதான வரி விதிப்பு முட்டாள்தனமான நடவடிக்கை – அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் விமர்சனம்!

தனக்கு தானே விருது அறிவித்துக்கொண்ட அசிம் முனீர் – சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

புதினை வரவேற்க அமெரிக்க போர் விமானங்கள் – ரஷ்யாவிற்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையா?

Load More

அண்மைச் செய்திகள்

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

நெல்லையில் பாஜக மண்டல மாநாடு – சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா!

கூட்டணி அமைக்கும் அதிகாரத்தை ராமதாசுக்கு வழங்கி பாமக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்!

நாமக்கல் அருகே பெண்ணை மிரட்டி கல்லீரல் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

மேலூர் அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை – போலீஸ் விசாரணை!

பெரியார் விருதுகளை திரும்ப பெற உத்தரவிடக் கோரிய வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

திருச்செந்தூர் கோயிலில் ரூ.100 கட்டண தரிசனத்தை ரத்து செய்து பொது தரிசன வழியில் அனுமதி – பக்தர்கள் வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies