பாகிஸ்தான், சீன எல்லையில் பதட்டம் ? ஸ்ரீநகரில் மிக்-29 போர் விமானங்கள் நிலை நிறுத்தம்!
Mar 18, 2026, 10:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தான், சீன எல்லையில் பதட்டம் ? ஸ்ரீநகரில் மிக்-29 போர் விமானங்கள் நிலை நிறுத்தம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 12, 2023, 12:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் மற்றும் சீனா எல்லையில் எவ்வித சவால்களையும் சமாளிக்கும் வகையில், ஸ்ரீநகரில் மிக்-29 போர் விமானங்களை இந்தியா நிலை நிறுத்தி இருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகள் எப்போதும் பதற்றம் நிறைந்ததாகவே இருக்கின்றன. கார்கில் உட்பட சில இடங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அத்துமீறிய பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்திருக்கிறது. அதேபோல, கடந்த 2020-ம் ஆண்டு லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறிய சீனாவுக்கும், இந்தியா பதிலடி கொடுத்தது.

இதையடுத்து, பாகிஸ்தான் மற்றும் சீன எல்லையில், மேம்படுத்தப்பட்ட இராணுவ தளவாடங்களை இந்தியா நிலைநிறுத்தி வருகிறது. மேலும், தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில், சுரங்கப் பாதைகளையும் இந்தியா அமைத்து வருகிறது. குறிப்பாக, கார்கில் சம்பவத்துக்குப் பிறகு பாகிஸ்தான் எல்லையில் மிக்-21 ரக போர்விமானங்களையும், கல்வான் சம்பவத்திற்குப் பிறகு, லடாக் எல்லையில் மிக்-29 ரக போர் விமானங்களை இந்தியா நிலை நிறுத்தியது.

இந்த நிலையில், திடீரென ஸ்ரீநகரிலும் மிக்-29 ரக போர் விமானங்களை இந்தியா நிலை நிறுத்தி இருக்கிறது. இதனால், பாகிஸ்தான் மற்றும் சீன எல்லையில் பதற்றம் நிலவுகிறதா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. பால்கோட் தாக்குதலின்போது பாகிஸ்தானின் எஃப்-16 ரக போர் விமானத்தை, தாக்கி அழித்த மிக்-21 ரக போர் விமானத்தை விட, அதிக திறன் கொண்டது மிக்-29 ரக போர் விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து விமானப் படைப் பிரிவுத் தலைவர் விபுல் சர்மா கூறுகையில், “காஷ்மீர் பள்ளத்தாக்கின் மையப்பகுதியாக ஸ்ரீநகர் விளங்குகிறது. மேலும், தரைமட்டத்தில் இருந்து மிகவும் உயரமான பகுதியில் அமைந்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, அதிக எடை, உந்துதல் திறன், எதிரிகளின் ஊடுருவலுக்கு குறைந்த நேரத்தில் பதிலடி கொடுப்பது போன்ற மூலோபாய ரீதியாக மிக்-29 ரக போர் விமானம் மிகவும் சிறந்தது. ஆகவே, மிக்-29 ரக போர் விமானம் ஸ்ரீநகரில் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

நைஜர் நாட்டில் இராணுவ புரட்சி: இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்!

Next Post

ட்விட்டர் பதிவில், அண்ணாமலை இன்று

Related News

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கேஸ் சிலிண்டர்கள் கேட்டு விநியோக மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம் – மத்திய அரசு

வாரணாசியில் படகில் இப்தார் விருந்து – அசைவ உணவுகளை கங்கையில் வீசிய 14 பேர் கைது!

ஈரானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ பொருட்களை அனுப்பியது இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – 74 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு!

ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் : ஈரான் செயல் தலைவர் அலி லாரிஜானி கொலை – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : நிர்பயா நிதியை முழுமையாக செலவு செய்யாத திமுக அரசு – சிறப்பு தொகுப்பு!

ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெற்ற NDA : ஓங்கிய பாஜகவின் பலம் – சிறப்பு தொகுப்பு!

நலிவின் விளிம்பில் தமிழக ஜவுளித்துறை : மின் கட்டண உயர்வால் கதறும் தொழில்துறையினர்- சிறப்பு கட்டுரை!

நயினார் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் திமுக முனனாள் மாநில நிர்வாகி ஆர்.கே.வி. ராஜா!

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என தகவல்!

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை – அஷ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றம் செயல்படும் நாட்களை அதிகரிக்க வேண்டும் – மல்லிகார்ஜுன கார்கே

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies