நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் 23 மசோதாக்கள் நிறைவேற்றம்!
Jan 14, 2026, 07:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் 23 மசோதாக்கள் நிறைவேற்றம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 12, 2023, 07:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில், மக்களவையில் 22 மசோதாக்களும், மாநிலங்களவையில் 25 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. அதேசமயம், மக்களவை மற்றும் மாநிலங்களவை அனுமதியுடன் 1 மசோதா திரும்பப் பெறப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ம் தேதி தொடங்கியது. ஆனால், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. இதனால், 23 நாட்கள் அமர்வில்  17 அமர்வுகள்  நடந்தன. எனினும், எதிர்கட்சிகளின் அமளிக்கு மத்தியிலும் அவ்வப்போது சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

அந்த வகையில், மக்களவையில் 20 மசோதாக்களும், மாநிலங்களவையில் 5 மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இம்மசோதாக்களில் இரு அவைகளிலும் சேர்த்து மொத்தமாக 23 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதாவது, மக்களவையில் 22 மசோதாக்களும், மாநிலங்களவையில் 25 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. மக்களவை மற்றும் மாநிலங்களவையின் அனுமதியோடு 1 மசோதா திரும்பப் பெறப்பட்டிருக்கிறது.

இம்மசோதாக்களில், டெல்லி தேசிய தலைநகர் பிரதேச அரசு சட்டத் திருத்த மசோதா, இந்திய மேலாண்மை நிறுவனங்கள் திருத்த மசோதா, கடலோரப் பகுதிகள் கனிம மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை திருத்த மசோதா, பிறப்பு, இறப்பு பதிவு திருத்த மசோதா, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை திருத்த மசோதா, வழக்கறிஞர்கள் சட்டத் திருத்த மசோதா, பத்திரிகை மற்றும் பத்திரிகை பதிவு மசோதா, அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதா, மருத்தகம் திருத்த மசோதா, டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா, தேசிய நர்சிங், மருத்துவச்சி ஆணைய மசோதா, தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா, ஒளிப்பதிவு திருத்த மசோதா, கடலோர மீன்வளர்ப்பு ஆணைய திருத்த மசோதா, வன பாதுகாப்பு திருத்த மசோதா உள்ளிட்டவை அடங்கும்.

இது ஒருபுறம் இருக்க, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீது எதிர்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. இத்தீர்மானத்தின் மீதான விவாதம் 20 மணி நேரம் நடந்தது. இவ்விவாதத்தின் மீது பேசிய காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் பலரும் மத்திய அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இதற்கு மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாரான், கிரண் ரிஜூஜி, ஸ்மிருதி இரானி உள்ளிட்ட பலரும் பதிலடி கொடுத்தனர்.

நிறைவாக, நேற்று மாலை பாரத பிரதமர் நரேந்திர மோடி, நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கு விளக்கம் அளித்து சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக உரையாற்றினார். பிரதமர் பேசிக் கொண்டிருக்கும்போதே, எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பிரதமர் பேசி முடித்த பிறகு, நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில், இன்று காலை பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை சந்தித்து உரையாடினர்.

Tags: ParliamentAmith shaModi Meeting
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு காஷ்மீரில் நாளை மூவர்ணக்கொடி பேரணி: டி.ஜி.பி. அறிவிப்பு!

Next Post

செந்தில் பாலாஜிக்கு 25-ம் தேதிவரை காவல் நீட்டிப்பு: மீண்டும் புழல் சிறையில் அடைப்பு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies