மோடி இருப்பதால் தான் தமிழ்நாடும் இருக்கிறது: இல்லையெனில் தி.மு.க. பட்டா போட்டு விற்றிருக்கும்: அண்ணாமலை!
Oct 2, 2025, 07:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மோடி இருப்பதால் தான் தமிழ்நாடும் இருக்கிறது: இல்லையெனில் தி.மு.க. பட்டா போட்டு விற்றிருக்கும்: அண்ணாமலை!

Web Desk by Web Desk
Aug 13, 2023, 07:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மோடி இருப்பதால்தான் தமிழ்நாடும் இருக்கிறது: இல்லையெனில் தி.மு.க. பட்டா போட்டு விற்றிருக்கும்: அண்ணாமலை!

பிரதமர் மோடி இருப்பதால்தான் தமிழ்நாடும் இருக்கிறது. இல்லையென்றால் தி.மு.க. குடும்பம் ஜிஸ்கொயர் மூலம் பட்டா போட்டு விற்றிருக்கும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.

மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கும் வகையிலும், தமிழக தி.மு.க. அரசின் ஊழல், முறைகேடுகளை அம்பலப்படுத்தும் வகையிலும், என் மண் என் மக்கள் நடைப்பயணத்தை அண்ணாமலை தொடங்கி இருக்கிறார். அந்தவகையில், நடைப்பயணத்தின் 15-வது நாளான இன்று தூத்துக்குடியில் பிரசாரம் செய்த அண்ணாமலை, ” மீண்டும் மோடி பிரதமரானால் தமிழகம் இருக்காது என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். உண்மையைச் சொல்லப்போனால் மோடி இருப்பதால் தான் தமிழகம் இருக்கிறது. இல்லையெனில் தி.மு.க.வின் மொத்த குடும்பமும் ஜி ஸ்கொயர் மூலம் பட்டா போட்டு தமிழகத்தை விற்றிப்பார்கள்.

தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றியதை வைத்தே தி.மு.க. ஆட்சியை அப்புறப்படுத்தி விடலாம். தூத்துக்குடி மண் உப்புக்கு பெயர் பெற்றது. தமிழக அமைச்சர் கீதாஜீவன் பேசும்போது, உப்பு உற்பத்தியில் முதல் மாநிலமாக இருக்கும் குஜராத்தில், அரசு பல்வேறு உதவிகளை செய்திருப்பதாக கூறியிருக்கிறார். அதாவது, திராவிட மாடல் அரசு, குஜராத் மாடலை பாராட்டி இருக்கிறது..தமிழகம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பலாலாயிரம் கோடி ரூபாய் நிதிகளை ஒதுக்கியுள்ளது.

ஆனால், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி மத்திய அரசிடமிருந்து நிதிகளை பெற்றுத்தர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, நாடாளுமன்றத்தில் கூச்சலிடுவது போன்ற நிகழ்வுகளை செய்து குடும்பச் சண்டையில் தனது இருப்பைக் காட்டிக்கொள்ள முயற்சித்து வருகிறார். மருத்துவமனையில் இருக்கும் டாஸ்மாக் அமைச்சரை மகன், மருமகன், முதல்வர் என வரிசையாக சந்தித்து தங்களை மாட்டி விடாதே என்று கூறினார்கள்.

தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளில் கூறியதை செய்யவில்லை. குறிப்பாக, ஒரு சொட்டு மது இருக்காது என்றார்கள். ஆனால், தற்போது மதுவிலக்கு மற்றும் தி.மு.க.வினர் நடத்தி வரும் சாராய ஆலைகள் குறித்து கனிமொழியிடம் கேள்வி எழுப்பினால் தெறித்து ஓடி விடுகிறார். தி.மு.க. நிர்வாகிகள் நடத்தும் சாராய ஆலைகள் மூலம் 40% டாஸ்மாஸ்கிற்கு மது விநியோகம் செய்யப்படுகிறது. அதேபோல, இளைஞர்களுக்கு வேலை வழங்கவில்லை.

குரூப் 4 தேர்வு முடிவுகளை கடந்த 13 மாதங்களாக வெளியிடாமல் வைத்திருக்கிறார்கள். அதேசமயம், புரோக்கர்கள் மூலம் பேசி அரசுப் பணியிடங்களை நிரப்ப முயற்சி செய்து வருகிறார்கள். தமிழகம் பாலைவனமாக மாறி வருகிறது. தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆறுகளில் தண்ணீர் வரவில்லை என்றால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கொண்டாட்டம்தான். ஆனால், விவசாயிகளுக்கு திண்டாட்டம்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவில் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறுவோம். அதேபோல, தமிழகத்திலுள்ள 40 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம். மோடி மீண்டும் வெற்றிபெற்று பிரதமராவார். கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்திற்கு எந்த தொழிற்சாலையும் வரவில்லை. முதல்வர் ஸ்டாலின் துபாய்க்குச் சென்று 10 கோடி ரூபாய்க்க ஒப்பந்தம் போட்டார். ஆனால், அவர் டீக்குடித்த 1 ரூபாய் கூட இதுவரை தமிழகத்திற்கு வரவில்லை. இவர்கள் துபாய்க்குச் சென்றது முதலீட்டை ஈர்க்க அல்ல, பணப் பரிமாற்றத்திற்காக” என்று கூறினார்.

Tags: bjpenmanenmakkalannamalaiEn man En makkal
ShareTweetSendShare
Previous Post

சுதந்திர தினம்: செங்கோட்டையில் அணிவகுப்பு ஒத்திகை!

Next Post

அண்ணாமலை X இல் (ட்விட்டர்) இன்று

Related News

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies