மோடி இருப்பதால் தான் தமிழ்நாடும் இருக்கிறது: இல்லையெனில் தி.மு.க. பட்டா போட்டு விற்றிருக்கும்: அண்ணாமலை!
Jul 3, 2025, 08:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மோடி இருப்பதால் தான் தமிழ்நாடும் இருக்கிறது: இல்லையெனில் தி.மு.க. பட்டா போட்டு விற்றிருக்கும்: அண்ணாமலை!

Web Desk by Web Desk
Aug 13, 2023, 07:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மோடி இருப்பதால்தான் தமிழ்நாடும் இருக்கிறது: இல்லையெனில் தி.மு.க. பட்டா போட்டு விற்றிருக்கும்: அண்ணாமலை!

பிரதமர் மோடி இருப்பதால்தான் தமிழ்நாடும் இருக்கிறது. இல்லையென்றால் தி.மு.க. குடும்பம் ஜிஸ்கொயர் மூலம் பட்டா போட்டு விற்றிருக்கும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.

மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கும் வகையிலும், தமிழக தி.மு.க. அரசின் ஊழல், முறைகேடுகளை அம்பலப்படுத்தும் வகையிலும், என் மண் என் மக்கள் நடைப்பயணத்தை அண்ணாமலை தொடங்கி இருக்கிறார். அந்தவகையில், நடைப்பயணத்தின் 15-வது நாளான இன்று தூத்துக்குடியில் பிரசாரம் செய்த அண்ணாமலை, ” மீண்டும் மோடி பிரதமரானால் தமிழகம் இருக்காது என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். உண்மையைச் சொல்லப்போனால் மோடி இருப்பதால் தான் தமிழகம் இருக்கிறது. இல்லையெனில் தி.மு.க.வின் மொத்த குடும்பமும் ஜி ஸ்கொயர் மூலம் பட்டா போட்டு தமிழகத்தை விற்றிப்பார்கள்.

தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றியதை வைத்தே தி.மு.க. ஆட்சியை அப்புறப்படுத்தி விடலாம். தூத்துக்குடி மண் உப்புக்கு பெயர் பெற்றது. தமிழக அமைச்சர் கீதாஜீவன் பேசும்போது, உப்பு உற்பத்தியில் முதல் மாநிலமாக இருக்கும் குஜராத்தில், அரசு பல்வேறு உதவிகளை செய்திருப்பதாக கூறியிருக்கிறார். அதாவது, திராவிட மாடல் அரசு, குஜராத் மாடலை பாராட்டி இருக்கிறது..தமிழகம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பலாலாயிரம் கோடி ரூபாய் நிதிகளை ஒதுக்கியுள்ளது.

ஆனால், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி மத்திய அரசிடமிருந்து நிதிகளை பெற்றுத்தர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, நாடாளுமன்றத்தில் கூச்சலிடுவது போன்ற நிகழ்வுகளை செய்து குடும்பச் சண்டையில் தனது இருப்பைக் காட்டிக்கொள்ள முயற்சித்து வருகிறார். மருத்துவமனையில் இருக்கும் டாஸ்மாக் அமைச்சரை மகன், மருமகன், முதல்வர் என வரிசையாக சந்தித்து தங்களை மாட்டி விடாதே என்று கூறினார்கள்.

தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளில் கூறியதை செய்யவில்லை. குறிப்பாக, ஒரு சொட்டு மது இருக்காது என்றார்கள். ஆனால், தற்போது மதுவிலக்கு மற்றும் தி.மு.க.வினர் நடத்தி வரும் சாராய ஆலைகள் குறித்து கனிமொழியிடம் கேள்வி எழுப்பினால் தெறித்து ஓடி விடுகிறார். தி.மு.க. நிர்வாகிகள் நடத்தும் சாராய ஆலைகள் மூலம் 40% டாஸ்மாஸ்கிற்கு மது விநியோகம் செய்யப்படுகிறது. அதேபோல, இளைஞர்களுக்கு வேலை வழங்கவில்லை.

குரூப் 4 தேர்வு முடிவுகளை கடந்த 13 மாதங்களாக வெளியிடாமல் வைத்திருக்கிறார்கள். அதேசமயம், புரோக்கர்கள் மூலம் பேசி அரசுப் பணியிடங்களை நிரப்ப முயற்சி செய்து வருகிறார்கள். தமிழகம் பாலைவனமாக மாறி வருகிறது. தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆறுகளில் தண்ணீர் வரவில்லை என்றால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கொண்டாட்டம்தான். ஆனால், விவசாயிகளுக்கு திண்டாட்டம்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவில் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறுவோம். அதேபோல, தமிழகத்திலுள்ள 40 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம். மோடி மீண்டும் வெற்றிபெற்று பிரதமராவார். கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்திற்கு எந்த தொழிற்சாலையும் வரவில்லை. முதல்வர் ஸ்டாலின் துபாய்க்குச் சென்று 10 கோடி ரூபாய்க்க ஒப்பந்தம் போட்டார். ஆனால், அவர் டீக்குடித்த 1 ரூபாய் கூட இதுவரை தமிழகத்திற்கு வரவில்லை. இவர்கள் துபாய்க்குச் சென்றது முதலீட்டை ஈர்க்க அல்ல, பணப் பரிமாற்றத்திற்காக” என்று கூறினார்.

Tags: bjpenmanenmakkalannamalaiEn man En makkal
ShareTweetSendShare
Previous Post

சுதந்திர தினம்: செங்கோட்டையில் அணிவகுப்பு ஒத்திகை!

Next Post

அண்ணாமலை X இல் (ட்விட்டர்) இன்று

Related News

சிறுவாணி அணையில் கசிவு? : நிதி ஒதுக்கி அணையை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் 3 கேள்விகள்!

அமைதி காக்கும் நடிகர்கள் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

ரஷ்யா அதிரடி தாக்குதல் – உரியப் பதிலடி கொடுக்க முடியாமல் உக்ரைன் திணறல்!

ஆப்பிரிக்க கண்டத்தின் நம்பிக்கை ஒளி கானா : பிரதமர் மோடி புகழாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

போஷான் அபியான் திட்டத்துக்கு வழங்கும் நிதி எல்லாம் எங்கே செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்சார துறை ஊழியர்கள் போராட்டம்!

வியட்நாம் : கட்டிடம் மீது மின்னல் தாக்கிய காட்சி!

லாக்கப் மரணங்களுக்கு 2026 தேர்தலில் திமுகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர் – ஜெயக்குமார் திட்டவட்டம்!

இஸ்ரேல் தாக்கிய வீடியோவை வெளியிட்ட ஈரான்!

அஜித்குமார் மரணம் : 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு!

பாக். எல்லையில் நிறுத்தப்பட உள்ள அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்?

லாக்கப் டெத் : சக்தீஸ்வரன் வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு!

கர்நாடகா : கொல்லப்பட்டு கிடந்த 20-க்கும் மேற்பட்ட குரங்குகள்!

கிருஷ்ணகிரி : காரில் கடத்தப்பட்ட சிறுவன் : உறவினர்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies