மோடி இருப்பதால் தான் தமிழ்நாடும் இருக்கிறது: இல்லையெனில் தி.மு.க. பட்டா போட்டு விற்றிருக்கும்: அண்ணாமலை!
Jun 14, 2026, 09:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மோடி இருப்பதால் தான் தமிழ்நாடும் இருக்கிறது: இல்லையெனில் தி.மு.க. பட்டா போட்டு விற்றிருக்கும்: அண்ணாமலை!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 13, 2023, 07:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மோடி இருப்பதால்தான் தமிழ்நாடும் இருக்கிறது: இல்லையெனில் தி.மு.க. பட்டா போட்டு விற்றிருக்கும்: அண்ணாமலை!

பிரதமர் மோடி இருப்பதால்தான் தமிழ்நாடும் இருக்கிறது. இல்லையென்றால் தி.மு.க. குடும்பம் ஜிஸ்கொயர் மூலம் பட்டா போட்டு விற்றிருக்கும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.

மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கும் வகையிலும், தமிழக தி.மு.க. அரசின் ஊழல், முறைகேடுகளை அம்பலப்படுத்தும் வகையிலும், என் மண் என் மக்கள் நடைப்பயணத்தை அண்ணாமலை தொடங்கி இருக்கிறார். அந்தவகையில், நடைப்பயணத்தின் 15-வது நாளான இன்று தூத்துக்குடியில் பிரசாரம் செய்த அண்ணாமலை, ” மீண்டும் மோடி பிரதமரானால் தமிழகம் இருக்காது என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். உண்மையைச் சொல்லப்போனால் மோடி இருப்பதால் தான் தமிழகம் இருக்கிறது. இல்லையெனில் தி.மு.க.வின் மொத்த குடும்பமும் ஜி ஸ்கொயர் மூலம் பட்டா போட்டு தமிழகத்தை விற்றிப்பார்கள்.

தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றியதை வைத்தே தி.மு.க. ஆட்சியை அப்புறப்படுத்தி விடலாம். தூத்துக்குடி மண் உப்புக்கு பெயர் பெற்றது. தமிழக அமைச்சர் கீதாஜீவன் பேசும்போது, உப்பு உற்பத்தியில் முதல் மாநிலமாக இருக்கும் குஜராத்தில், அரசு பல்வேறு உதவிகளை செய்திருப்பதாக கூறியிருக்கிறார். அதாவது, திராவிட மாடல் அரசு, குஜராத் மாடலை பாராட்டி இருக்கிறது..தமிழகம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பலாலாயிரம் கோடி ரூபாய் நிதிகளை ஒதுக்கியுள்ளது.

ஆனால், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி மத்திய அரசிடமிருந்து நிதிகளை பெற்றுத்தர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, நாடாளுமன்றத்தில் கூச்சலிடுவது போன்ற நிகழ்வுகளை செய்து குடும்பச் சண்டையில் தனது இருப்பைக் காட்டிக்கொள்ள முயற்சித்து வருகிறார். மருத்துவமனையில் இருக்கும் டாஸ்மாக் அமைச்சரை மகன், மருமகன், முதல்வர் என வரிசையாக சந்தித்து தங்களை மாட்டி விடாதே என்று கூறினார்கள்.

தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளில் கூறியதை செய்யவில்லை. குறிப்பாக, ஒரு சொட்டு மது இருக்காது என்றார்கள். ஆனால், தற்போது மதுவிலக்கு மற்றும் தி.மு.க.வினர் நடத்தி வரும் சாராய ஆலைகள் குறித்து கனிமொழியிடம் கேள்வி எழுப்பினால் தெறித்து ஓடி விடுகிறார். தி.மு.க. நிர்வாகிகள் நடத்தும் சாராய ஆலைகள் மூலம் 40% டாஸ்மாஸ்கிற்கு மது விநியோகம் செய்யப்படுகிறது. அதேபோல, இளைஞர்களுக்கு வேலை வழங்கவில்லை.

குரூப் 4 தேர்வு முடிவுகளை கடந்த 13 மாதங்களாக வெளியிடாமல் வைத்திருக்கிறார்கள். அதேசமயம், புரோக்கர்கள் மூலம் பேசி அரசுப் பணியிடங்களை நிரப்ப முயற்சி செய்து வருகிறார்கள். தமிழகம் பாலைவனமாக மாறி வருகிறது. தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆறுகளில் தண்ணீர் வரவில்லை என்றால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கொண்டாட்டம்தான். ஆனால், விவசாயிகளுக்கு திண்டாட்டம்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவில் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறுவோம். அதேபோல, தமிழகத்திலுள்ள 40 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம். மோடி மீண்டும் வெற்றிபெற்று பிரதமராவார். கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்திற்கு எந்த தொழிற்சாலையும் வரவில்லை. முதல்வர் ஸ்டாலின் துபாய்க்குச் சென்று 10 கோடி ரூபாய்க்க ஒப்பந்தம் போட்டார். ஆனால், அவர் டீக்குடித்த 1 ரூபாய் கூட இதுவரை தமிழகத்திற்கு வரவில்லை. இவர்கள் துபாய்க்குச் சென்றது முதலீட்டை ஈர்க்க அல்ல, பணப் பரிமாற்றத்திற்காக” என்று கூறினார்.

Tags: bjpenmanenmakkalannamalaiEn man En makkal
ShareTweetSendShare
Previous Post

சுதந்திர தினம்: செங்கோட்டையில் அணிவகுப்பு ஒத்திகை!

Next Post

அண்ணாமலை X இல் (ட்விட்டர்) இன்று

Related News

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies