இந்திய தலைமை நீதிபதி பெயரில் போலிச் செய்தி: சமூக வலைத்தளங்களில் வைரலாவதால் பரபரப்பு!
Oct 17, 2025, 10:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய தலைமை நீதிபதி பெயரில் போலிச் செய்தி: சமூக வலைத்தளங்களில் வைரலாவதால் பரபரப்பு!

Web Desk by Web Desk
Aug 14, 2023, 08:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் வகையில், இந்தியத்  தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பெயரில், ஒரு அசாதாரண அறிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பெரும்பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியத் தலைமை நீதிபதியாக இருப்பவர் டி.ஒய்.சந்திரசூட். இவரது பெயரில் சமூக வலைத்தளங்களில் இன்று ஒரு பதிவு வைரலாகி வருகிறது. இந்திய ஜனநாயகம், உச்ச நீதிமன்றம் ஜிந்தாபாத் என்று தொடங்கும் அப்பதிவில், “இந்திய அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற நாங்கள் எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம். ஆனால், இதற்கு மக்களாகிய உங்களது ஒத்துழைப்பு மிகவும் முக்கியம்.

ஆகவே, மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். அரசிடம் உரிமைகளைக் கேட்டு வீதியில் இறங்கிப் போராடுங்கள். இந்தச் சர்வாதிகார அரசு, மக்களைப் பயமுறுத்தும், அச்சுறுத்தும். ஆனால், நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டாம். தைரியமாக அரசிடம் கணக்குக் கேளுங்கள். தவறைத் தட்டிக் கேளுங்கள். உங்களுடன் நான் இருக்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அந்தப் பதிவில், தலைமை நீதிபதி சந்திரசூட்டின் புகைப்படமும் இடம்பெற்றிருக்கிறது. இப்பதிவு ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் வாட்ஸ் ஆப்பில் பகிரப்பட்டு வருகிறது. எனினும், இது போலியான பதிவு என்றும், இப்படியொரு பதிவை தலைமை நீதிபதி வெளியிடவில்லை என்றும், உச்ச நீதிமன்றத்தின் பொதுச்செயலாளர் அதுல் குர்ஹேகர் மற்றும் இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் மறுப்புத் தெரிவித்திருக்கின்றனர்.

இதுகுறித்து பேசிய துஷார் மேத்தா, “இது ஒரு போலியான பதிவு. எந்த தலைமை நீதிபதியும், மத்திய அரசுக்கு எதிராக இதுபோன்றதொரு செயலை செய்ய மாட்டார்கள். அதிலும், தலைமை நீதிபதி சந்திரசூட் மிகவும் புத்திசாலி. ஆகவே, இப்படியொரு செயலை அவர் செய்திருக்க மாட்டார். தவிர, நீதியரசரின் பெயரால் இப்படியொரு பதிவை வெளியிட்டிருக்கும் நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Tags: supreme court chief justice chandrachudsupreme court
ShareTweetSendShare
Previous Post

சுதந்திர தினத்தையொட்டி 954 காவல்துறை அதிகாரிகளுக்குப் பதக்கங்கள்- மத்திய அரசு அறிவிப்பு

Next Post

வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கு: விசாரிக்க மறுத்து உயர் நீதிமன்ற நீதிபதி விலகல்!

Related News

தீபாவளி பண்டிகை : மக்களின் மனம் கவர்ந்த “மாப்பிள்ளை சம்பா முறுக்கு” – சிறப்பு தொகுப்பு!

ஐப்பசி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

தீபாவளி பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை – மகிழ்ச்சியில் திருப்பூர் பனியன் நிறுவன ஊழியர்கள் – சிறப்பு தொகுப்பு!

களைகட்டும் தீபாவளி வியாபாரம் – தங்கம் விலை உயர்வால் கவரிங் விற்பனை அதிகரிப்பு!

ரஷ்ய எண்ணெய் கொள்முதல் நிறுத்தமா? : டிரம்பின் கருத்துக்கு இந்தியா மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல – தேர்தல் ஆணையம் பதில்!

Load More

அண்மைச் செய்திகள்

தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

பணி நிரந்தரம் ஆன 2,000 ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 3 மாத ஊதியம் வழங்கப்படாத விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

கண்துடைப்புக்காக, ஆணையம், குழு என அமைத்து மக்கள் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

கரூர் துயரச் சம்பவத்தில் எதை மறைக்கப் பார்க்கிறது திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

கடலூர் அருகே மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

நெல்லையில் ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க கோரி மாகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்!

பேரவையில் அன்புமணி தரப்பு எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கை முன் தர்ணா!

கோவை ஜி.டி.நாயுடு மேம்பால சாலை பாதுகாப்பை சீர்படுத்த நடவடிக்கை தேவை – வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – சென்னை காவல் ஆணையருக்கு நோட்டீஸ்!

ஐப்பசி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies