தமிழர்கள் தமிழுடன் சேர்த்து இந்தியையும் கற்க வேண்டும்: அமித்ஷா வலியுறுத்தல்!
Mar 19, 2026, 03:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழர்கள் தமிழுடன் சேர்த்து இந்தியையும் கற்க வேண்டும்: அமித்ஷா வலியுறுத்தல்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 15, 2023, 04:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழர்கள் தாய்மொழியான தமிழுடன் சேர்த்து இந்தியையும் கற்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி இருக்கிறார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரிலுள்ள இந்திய ஆசிரியர்கள் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா நேற்று மாலை நடந்தது. இவ்விழாவில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசுகையில், “நான் ஆங்கிலத்துக்கு எதிரானவன் அல்ல. ஏனெனில், எந்தவகையான அறிவையும் புறக்கணிக்காத நாடாக இந்தியா இருக்கிறது. ஆகவே, ஆங்கிலத்துடன் சேர்த்து ஜெர்மன், ப்ரெஞ்ச் போன்ற மொழிகளையும் குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும்.

அதேபோல, குஜராத் குழந்தைகள் குஜராத்தியுடன் இந்தியையும், அஸ்ஸாம் குழந்தைகள் அஸ்ஸாம் மொழியுடன் இந்தியையும், தமிழர்கள் தமிழ்மொழியுடன் இந்தியையும் சேர்த்து கற்றுக்கொள்ள வேண்டும். இது நடந்தால் நம் நாடு முன்னேறுவதை யாராலும் தடுக்க முடியாது. மேலும், இந்த 4 பாடங்களுடன் சமஸ்கிருத மொழியும் கற்றுத்தரப்படுகிறது. இதையும் மாணவர்கள் கூடுதலாக கற்றுக்கொள்ள வேண்டும்.

ஏனெனில், உலகம் முழுவதிலும் உள்ள அறிவுக்களஞ்சியம் நமது வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் சமஸ்கிருதம் மட்டும்தான். இதை கற்பவர்கள் வாழ்க்கையில் எந்தப் பிரச்னை வந்தாலும், அது ஒரு பிரச்னையாகவே இருக்காது. காரணம், அறிவு எங்கிருந்து வந்தது என்பதுப் பற்றி சிந்திக்காமல் நல்ல எண்ணங்களை உள்வாங்க வேண்டும் என்று வேதங்கள் போதிக்கின்றன.

அறிவு எங்கிருந்து வந்தாலும், அது நம் சமுதாயம், மக்கள், உலகம் மற்றும் பிரபஞ்சத்தின் நலனுக்கானதா என்பதை பார்க்க வேண்டும். அதில் நவீன பரிமாணத்தையும் சேர்க்க வேண்டும். அறிவு மற்றும் அறிவியல் துறையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இவற்றை புரிந்துகொண்டு இரண்டையும் ஒருங்கிணைத்து முழுமையான கல்வி முறையை உருவாக்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, நம் வரலாறு, இலக்கணம், இலக்கியங்கள் தாங்கியுள்ள தாய்மொழியை பாதுகாப்பது உங்களது கடமையாகும். இதனால்தான், புதிய கல்விக்கொள்கை 2020-ல் குழந்தைகளுக்கு தாய்மொழியை பயிற்றுவிக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

Tags: TamilAmitshahlanguageAmitshah Speech
ShareTweetSendShare
Previous Post

மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை: வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கி இருக்கிறேன்: பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

காங்கிரஸ் கட்சியின் மனநிலையை புரிந்து கொள்ளுங்கள்: அனுராக் தாக்கூர்!

Related News

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies