தமிழர்கள் தமிழுடன் சேர்த்து இந்தியையும் கற்க வேண்டும்: அமித்ஷா வலியுறுத்தல்!
Jun 24, 2026, 09:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழர்கள் தமிழுடன் சேர்த்து இந்தியையும் கற்க வேண்டும்: அமித்ஷா வலியுறுத்தல்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 15, 2023, 04:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழர்கள் தாய்மொழியான தமிழுடன் சேர்த்து இந்தியையும் கற்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி இருக்கிறார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரிலுள்ள இந்திய ஆசிரியர்கள் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா நேற்று மாலை நடந்தது. இவ்விழாவில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசுகையில், “நான் ஆங்கிலத்துக்கு எதிரானவன் அல்ல. ஏனெனில், எந்தவகையான அறிவையும் புறக்கணிக்காத நாடாக இந்தியா இருக்கிறது. ஆகவே, ஆங்கிலத்துடன் சேர்த்து ஜெர்மன், ப்ரெஞ்ச் போன்ற மொழிகளையும் குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும்.

அதேபோல, குஜராத் குழந்தைகள் குஜராத்தியுடன் இந்தியையும், அஸ்ஸாம் குழந்தைகள் அஸ்ஸாம் மொழியுடன் இந்தியையும், தமிழர்கள் தமிழ்மொழியுடன் இந்தியையும் சேர்த்து கற்றுக்கொள்ள வேண்டும். இது நடந்தால் நம் நாடு முன்னேறுவதை யாராலும் தடுக்க முடியாது. மேலும், இந்த 4 பாடங்களுடன் சமஸ்கிருத மொழியும் கற்றுத்தரப்படுகிறது. இதையும் மாணவர்கள் கூடுதலாக கற்றுக்கொள்ள வேண்டும்.

ஏனெனில், உலகம் முழுவதிலும் உள்ள அறிவுக்களஞ்சியம் நமது வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் சமஸ்கிருதம் மட்டும்தான். இதை கற்பவர்கள் வாழ்க்கையில் எந்தப் பிரச்னை வந்தாலும், அது ஒரு பிரச்னையாகவே இருக்காது. காரணம், அறிவு எங்கிருந்து வந்தது என்பதுப் பற்றி சிந்திக்காமல் நல்ல எண்ணங்களை உள்வாங்க வேண்டும் என்று வேதங்கள் போதிக்கின்றன.

அறிவு எங்கிருந்து வந்தாலும், அது நம் சமுதாயம், மக்கள், உலகம் மற்றும் பிரபஞ்சத்தின் நலனுக்கானதா என்பதை பார்க்க வேண்டும். அதில் நவீன பரிமாணத்தையும் சேர்க்க வேண்டும். அறிவு மற்றும் அறிவியல் துறையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இவற்றை புரிந்துகொண்டு இரண்டையும் ஒருங்கிணைத்து முழுமையான கல்வி முறையை உருவாக்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, நம் வரலாறு, இலக்கணம், இலக்கியங்கள் தாங்கியுள்ள தாய்மொழியை பாதுகாப்பது உங்களது கடமையாகும். இதனால்தான், புதிய கல்விக்கொள்கை 2020-ல் குழந்தைகளுக்கு தாய்மொழியை பயிற்றுவிக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

Tags: TamilAmitshahlanguageAmitshah Speech
ShareTweetSendShare
Previous Post

மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை: வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கி இருக்கிறேன்: பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

காங்கிரஸ் கட்சியின் மனநிலையை புரிந்து கொள்ளுங்கள்: அனுராக் தாக்கூர்!

Related News

ஐஐடி இயக்குநர் காமகோடி, நடிகர் மம்முட்டி, மாதவன் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் குடியரசு தலைவர் வழங்கினார்!

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies