மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை: வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கி இருக்கிறேன்: பிரதமர் மோடி பெருமிதம்!
Jun 24, 2026, 08:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை: வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கி இருக்கிறேன்: பிரதமர் மோடி பெருமிதம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 15, 2023, 04:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தார்கள். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கி இருக்கிறேன் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் மூவர்கணக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பாரத பிரதமர் மோடி, “உறுதியான இந்தியா தனக்கான பணிகளை சிறப்பாக நிறைவேற்றி வருகிறது. புதிய நாடாளுமன்றம் கட்டுவது தொடர்பாக முந்தைய அரசு கடந்த 25 ஆண்டுகளாக விவாதித்து வந்தது. ஆனால், தற்போதைய அரசு அதை கட்டி முடித்திருக்கிறது. இதுதான் புதிய இந்தியா. இது தன்னம்பிக்கை நிறைந்த இந்தியா.

அதேசமயம், ஊழல், வாரிசு அரசியல், கொள்கைகளில் சமரசம் ஆகியவை இந்தியாவின் திறனை மோசமாக பாதிக்கிறது. ஆகவே, இம்மூன்றையும் எதிர்த்து போராடுவது தற்போதைய தேவையாக இருக்கிறது. ஒரு அரசியல் கட்சிக்கு ஒரே குடும்பம் மட்டும் எப்படி பொறுப்பாக இருக்க முடியும். ஆகவே, ஊழல், குடும்ப அரசியல் ஆகியவற்றுக்கு எதிராக போராடுவதுதான் எனது வாழ்நாள் அர்ப்பணிப்பாக இருக்கும்.

எனது தலைமையிலான ஒவ்வொரு அமைச்சகங்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளை திறம்பட செய்து வருகின்றன. மேலும், பெரும்பான்மை அரசினால்தான் சீர்திருத்தங்களை செய்ய முடியும். அந்தவகையில், எனது தலைமையில் பெரும்பான்மை அரசு அமைந்ததால் சீர்திருத்தங்களை செய்ய எனக்கு நம்பிக்கை கிடைத்தது. மக்கள் என் மீது வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை. வளரச்சியடைந்த இந்தியாவை உருவாக்கி இருக்கிறேன்.

நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும்போது, 2047-ல் இந்தியாவின் வளர்ச்சியானது வளர்ந்த நாடுகளைப்போல இணையற்றதாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். இதை நான் சொல்லக் காரணம், எனது நாட்டின் திறன் மற்றும் வளங்களின் அடிப்படையில்தான். ஆகவே, வரும் 5 ஆண்டுகள் கனவை நனவாக்கும் பொன்னான தருணமாகும். அடுத்த ஆண்டு நான் செங்கோட்டையில் கொடியேற்றும்போது நாட்டின் சாதனைகள் மற்றும் வளர்ச்சியை முன்வைப்பேன்.

கடந்த சில வாரங்களாக மணிப்பூரில் வன்முறை அலை வீசியது. பலரும் தங்களது உயிரை இழந்தனர். எங்கள் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் அவமானப்படுத்தப்பட்டனர். மணிப்பூரில் அமைதியைக் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றி வருகின்றன. தற்போது அப்பகுதியில் அமைதி திரும்பி வருகிறது. மணிப்பூர் மக்களுடன் இந்த நாடே நிற்கிறது. மணிப்பூர் வன்முறைக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்படும்.

அதேபோல, இந்த ஆண்டு நாட்டின் பல பகுதிகளில் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இயற்கை பேரிடர்கள் பாதிப்புகளை உருவாக்கி இருக்கிறது. இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பிரதமர் மோடி கூறினார்.

Tags: Modi in Red FortIndiaModimodi speechRed Fortindependence day76th independance day
ShareTweetSendShare
Previous Post

புதிதாக விஸ்வகர்மா திட்டம்: பிரதமர் மோடி அறிவிப்பு!

Next Post

தமிழர்கள் தமிழுடன் சேர்த்து இந்தியையும் கற்க வேண்டும்: அமித்ஷா வலியுறுத்தல்!

Related News

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies