உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த 10 சதவிகித வரி சட்டவிரோதமானது என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உலக நாடுகள் மீதான டிரம்ப் விதித்த பரஸ்பர வரியை அமெரிக்க உச்ச நீதிமன்றம் பிப்ரவரியில் ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து, மீண்டும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது புதிதாக 10 சதவிகித வரியை டிரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில், மீண்டும் டிரம்ப்பின் வரிவிதிப்பை சட்டவிரோதமானவை என அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும், வர்த்தக நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் டிரம்ப் அரசு மேல்முறையீடு செய்யவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
















