முப்படைகளின் தலைமை தளபதியாக தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் லெப்டினண்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
முப்படை தலைமை தளபதியாக இருக்கும் அனில் சவுகானின் பதவிக்காலம் இம்மாத இறுதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் என்.எல்.சுப்ரமணிக்கு வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன் படி ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி இந்தியாவின் அடுத்த முப்படைத் தலைமைத் தளபதியாக நியமிக்கப்படுவதாகவும், அவர் பொறுப்பேற்க உள்ள நாட்கள் வரை ராணுவ விவகாரங்கள் துறையின் செயலாளராக பணியாற்றுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக தமிழகத்தை சேர்ந்த அதிகாரியை நியமித்துள்ள மத்திய அரசுக்கு பொதுமக்கள் பலரும் தங்களது பெருமிதங்களை தெரிவித்து வருகின்றனர்.
















