தவெகவிற்கு பதிலாக அதிமுக ஆட்சி அமைய ஆதரவு தெரிவிக்குமாறு திமுக வலியுறுத்தியதை தாங்கள் மறுத்துவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளை கைப்பற்றிய தவெக, திமுக-வை வீழ்த்தி புதிய அரசை அமைக்க உள்ளது.
பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்கள் தேவைப்படும் நிலையில், தவெக பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இதுவரை காங்கிரஸ், கம்யூனிஸ் ஆகிய கட்சிகள் தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தவெகவிற்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக விசிக தங்களது நிலைப்பாட்டை இதுவரை தெரிவிக்கவில்லை.
ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்த ஐயூஎம்எல் கட்சியும் தங்கள் முடிவிலிருந்து பின்வாங்கிய நிலையில், தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்குமா என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
இதனிடையே, தவெக-விற்கு பதிலாக அதிமுக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிக்குமாறு திமுக வலியுறுத்தியதை தாங்கள் மறுத்துவிட்டதாக, கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
















