ஜனநாயக அடிப்படையிலும், மக்கள் நலன் சார்ந்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயல்படும் என அக்கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய் சிபிஐ அலுவலகம் வந்து நன்றி தெரிவித்தார். உழைக்கும் மக்கள் நலன் சார்ந்தும், ஜனநாயக அடிப்படையிலும் செயல்படுவோம் என்றும், விஜய் பதவியேற்றபின் அவரை சந்தித்து எங்கள் கருத்துக்களை பரிமாறுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
















